விவசாயத்திற்கு தனி பட்ஜெட்? மத்திய அரசு தகவல்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக, ரயில்வே பட்ஜெட், மத்திய என தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தற்போது ஒருங்கிணைந்த பட்ஜெட்டாக மத்திய அரசு தாக்கல் செய்து வருகிறது. அதேசமயம், இந்தியாவில் பிரதான தொழிலாக இருக்கும் விவசாயத்திற்கு மத்திய, மாநில அரசுகள் தனி பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதன் மூலம், விவசாயத் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றும், விவசாயத்துறை வளர்ச்சி விரைவு பெறும் என்பதாலும் … Read more

பிரதமரின் பேச்சைக் கண்டித்து போராட்டம்.. டிஆர்எஸ், பாஜக தொண்டர்கள் ஒருவரையொருவர் தாக்கியதால் பரபரப்பு <!– பிரதமரின் பேச்சைக் கண்டித்து போராட்டம்.. டிஆர்எஸ், பாஜக த… –>

தெலங்கானா மாநிலம் ஜன்கானில் தெலங்கானா ராஷ்டிர சமிதிக் கட்சியினருக்கும், பாஜகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். ஆந்திர மாநிலப் பிரிவினை தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசியதைக் கண்டித்துத் தெலங்கானா ராஷ்டிர சமிதிக் கட்சியினர் கருப்புக்கொடி காட்டிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாஜகவினர் அங்குத் திரண்டு வந்ததால் மோதல் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.  Source link

என்ஜின் கவர் இன்றி பறந்த விமானம் – விசாரணைக்கு உத்தரவு

மும்பை: மும்பை விமான நிலையத்திலிருந்து இன்று காலை அலையன்ஸ் ஏர் விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது. 4 ஆண்டு பழமையான இந்த விமானத்தில் சுமார் 70 பயணிகள் இருந்தனர். விமானம் பாதுகாப்பாக புஜ் நகரில் தரையிறங்கியது. மும்பை விமான நிலையத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு விமானம் புறப்பட்டபோது, என்ஜின் கவர் ஓடுபாதையில் விழுந்தது. விமானம் புறப்பட்ட பிறகு ஓடுபாதையில் இருந்து அந்த கவர் கண்டெடுக்கப்பட்டது என மும்பை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனாலும், என்ஜின் … Read more

ஹிஜாப் அணிய அனுமதி கோரிய வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்: இடைக்கால தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

பெங்களூரு: சிறுபான்மை வகுப்பு மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதி வழங்ககோரி தாக்கல் செய்துள்ள வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீட்ஷித் மாற்றி உத்தரவிட்டார். இஸ்லாமிய மாணவிகள் தாக்கல் செய்த மனு மீதான வழக்கில் இடைக்கால தடை விதிக்க கர்நாடக உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சிறுபான்மை வகுப்பு மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருவதற்கு தடை விதித்து கடந்த 5ம் தேதி கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உடுப்பி அரசு முதல்நிலை கல்லூரி மாணவிகள் … Read more

ஹிஜாப் விவகாரம்: மாணவ சமூகத்தையே கூறுபோடும் வெறுப்பரசியல் – மக்களவையில் சு.வெங்கடேசன் ஆவேசம்

புதுடெல்லி: “ஹிஜாப் அணிவதை முன்வைத்து கர்நாடகாவில் நடைபெறும் வெறுப்பரசியல் மாணவ சமூகத்தினையே கூறுபோட்டுக் கொண்டிருக்கிறது” என்று மக்களவையில் சு.வெங்கடேசன் எம்.பி ஆவேசமாக பேசினார். மக்களவையில் இன்று பேசிய அவர், “ஜனவரி 15 ஆம் தேதி தமிழகத்தில் தனியார் தொடைகாட்சியில் சிறார் நிகழ்சி ஒன்று ஒளிப்பரப்பானது. இந்த நிகழ்ச்சி பிரதமரின் மாண்பை குறைத்துவிட்டது என்று சொல்லி மத்திய இணை அமைச்சர் அவரே முன்வந்து புகாரினை கேட்டு வாங்கி அமைச்சகத்தின் மூலம் சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிலையத்திற்கு நோட்டீஸ் அனுப்புகிறார். இன்று … Read more

இவரை ஞாபகம் இருக்கா மக்களே? – காதலர் தினத்தில் போராட்டம் அறிவித்துள்ளார்!

சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒயின் வகை மதுவை விற்பனை செய்ய அனுமதி அளித்து புதிய சட்டத்தை மகாராஷ்டிர மாநில அரசு அண்மையில் கொண்டு வந்தது. இதன்படி 1,,000 சதுர அடிக்கும் மேல் பரப்பளவு கொண்ட சூப்பர் மார்க்கெட்களில் ஒயின் விற்பனை செய்யலாம். இதற்கு ஆண்டுக்கு 5,000 ரூபாய் உரிம கட்டணம் செலுத்த வேண்டும் என்று சிவசேனா அரசு தெரிவித்துள்ளது. மாநில அரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சியான பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், சூப்பர் மார்க்கெட்டில் … Read more

ஹிஜாப் வழக்கு.. விரிவான அமர்வுக்குப் பரிந்துரை <!– ஹிஜாப் வழக்கு.. விரிவான அமர்வுக்குப் பரிந்துரை –>

கர்நாடகக் கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து செல்லத் தடை விதித்ததை எதிர்த்து மாணவியர் தொடுத்த வழக்குகளை விரிவான அமர்வு விசாரிக்கப் பரிந்துரைத்த உயர் நீதிமன்றத் தனி நீதிபதி, இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்துவிட்டார். நீதிபதி கிருஷ்ண தீட்சித் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் வழக்கறிஞரும், அரசு வழக்கறிஞரும் வழக்கை விரைந்து விசாரிக்கும்படி கேட்டுக்கொண்டனர். விரிவான பரிசீலனை தேவைப்படுவதால் விரிவான அமர்வுக்குப் பரிந்துரைப்பதாக நீதிபதி கிருஷ்ண தீட்சித் தெரிவித்தார். இதையடுத்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்கும்படி மனுதாரர்களின் வழக்கறிஞர்கள் கேட்டுக்கொண்டனர். … Read more

ஐ.ஏ.எஸ். அதிகாரியுடனான தொடர்பு குறித்து ஸ்வப்னாவிடம் இன்று விசாரணை

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 2019-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திற்கு வந்த பார்சலில் 30 கிலோ கடத்தல் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சுங்கதுறை அதிகாரிகள் வழக்குபதிவு செய்து தூதரக முன்னாள் அதிகாரி உள்பட சிலரை கைது செய்தனர். இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ஸ்வப்னா என்பவரும் கைதானார். இவருக்கும் கேரள அரசின் மூத்த ஐ.ஏ.எஸ்.அதிகாரி சிவசங்கரனுக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து அவரையும் அதிகாரிகள் கைது செய்தனர். ஜெயிலில் இருந்து விடுதலையான சிவசங்கரனுக்கு மீண்டும் … Read more

பொருளாதார வழித்தடம் குறித்த சீனா-பாக். கூட்டறிக்கையில் மீண்டும் காஷ்மீர் சர்ச்சை: இந்தியா கடும் கண்டனம்

புதுடெல்லி: பொருளாதார வழித்தடம் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக செல்வதாக குறிப்பிட்ட சீனா – பாகிஸ்தானின் கூட்டறிக்கைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வர்த்தக பயன்பாட்டிற்காக சீனா – பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தை சீனா அமைத்து வருகிறது. இந்த வழித்தடம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக செல்கிறது. ஆனால், பொருளாதார வழித்தடம் குறித்து சீனா – பாகிஸ்தான் வெளியிடும் எந்தவொரு கூட்டறிக்கையிலும் இதை ஆக்கிரமிப்பு காஷ்மீர் என கூறாமல் ஜம்மு காஷ்மீர் என்று கூறுவதையே வழக்கமாக கொண்டுள்ளன.இந்நிலையில், பீஜிங்கில் … Read more

சாலைப் பராமரிப்புகளை மாநில அரசுதான் செய்யவேண்டும்: மக்களவையில் கனிமொழி கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் பதில்

புதுடெல்லி: மத்திய அரசிடம் தமிழகத்தின் கிராமப்புற சாலைகளை சீரமைப்பது தொடர்பாக திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பிய நிலையில், ‘அது மாநில அரசின் பொறுப்பு’ என்று கூறி மத்திய இணை அமைச்சர் ஃபகன்சிங் குளஸ்தே பதில் கொடுத்துள்ளார். பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை, கடந்த 2021 நவம்பரில் பெய்த பருவ மழை மற்றும் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன. இது தொடர்பாக இன்று திமுகவின் மக்களவைத் துணைத் தலைவர் கனிமொழி, … Read more