ஹிஜாப் வழக்கு.. விரிவான அமர்வுக்குப் பரிந்துரை <!– ஹிஜாப் வழக்கு.. விரிவான அமர்வுக்குப் பரிந்துரை –>

கர்நாடகக் கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து செல்லத் தடை விதித்ததை எதிர்த்து மாணவியர் தொடுத்த வழக்குகளை விரிவான அமர்வு விசாரிக்கப் பரிந்துரைத்த உயர் நீதிமன்றத் தனி நீதிபதி, இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்துவிட்டார்.

நீதிபதி கிருஷ்ண தீட்சித் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் வழக்கறிஞரும், அரசு வழக்கறிஞரும் வழக்கை விரைந்து விசாரிக்கும்படி கேட்டுக்கொண்டனர்.

விரிவான பரிசீலனை தேவைப்படுவதால் விரிவான அமர்வுக்குப் பரிந்துரைப்பதாக நீதிபதி கிருஷ்ண தீட்சித் தெரிவித்தார். இதையடுத்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்கும்படி மனுதாரர்களின் வழக்கறிஞர்கள் கேட்டுக்கொண்டனர்.

மனுக்கள் தவறானவை எனக் கூறிய அரசு வழக்கறிஞர், இடைக்கால உத்தரவு பிறப்பிக்கக் கூடாது எனக் கேட்டுக்கொண்டார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.