திருப்பதி: வாகன சோதனையில் சிக்கிய ரூ. 10 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள்

திருப்பதி அருகே பாக்கராபேட்டை மலைப்பாதையில் வாகன சோதனையில் ₹10 லட்சம் மதிப்பிலான 25 செம்மரக்கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள பாக்கராபேட்டை வனப்பகுதியில் செம்மரக்கட்டைகளை வெட்டி மலைப்பாதை வழியாக கடத்தப்படுவதாக பாக்கராபேட்டை வனத்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து வனத்துறையினர் அந்த மலை பாதையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வேகமாக வந்த பொலிரோ வாகனத்தை மடக்கியபோது, அது நிற்காமல் சென்றது.
image
இதையடுத்து சற்று தூரத்தில் அந்த வாகனத்தில் இருந்து சிலர் இறங்கி ஓடியதால் சந்தேகடைந்த காவல் துறையினர் அவர்களை விரட்டிச் சென்றனர். அப்போது, அவர்கள் அடர்ந்த வனப்பகுதிக்குள் ஓடி மறைந்தனர். இதனையடுத்து அந்த வாகனத்தை சோதனையிட்டபோது, அதில் 25 செம்மரக்கட்டைகள் இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து பொலிரோ வாகனத்துடன் செம்மரக் கட்டைகளையும் பாக்கராபேட்டை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த செம்மரக்கட்டைகளின் மதிப்பு ₹10 லட்சம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.