“100 நாட்களுக்குள் ஒரு லட்சம் தடகள வீரர்கள் அடையாளம் காணப்படுவர்” – மத்திய அமைச்சர் தகவல்

புதுடெல்லி: கீர்த்தி திட்டத்தின் கீழ் 100 நாட்களுக்குள் ஒரு லட்சம் இளம் தடகள விளையாட்டு வீரர்கள் அடையாளம் காணப்படுவார்கள் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். மத்திய இளைஞர் நலன், விளையாட்டு, தொழிலாளர் நலன், வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, புதுடெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கீர்த்தி (விளையாட்டில் புதிய திறமைசாலிகளை அடையாளம் காணுதல்) திட்டத்தின் 2-ம் கட்டத்தை தொடங்கிவைத்தார். அப்போது பேசிய அவர், “100 நாட்களுக்குள் … Read more

“கன்னடர் இடஒதுக்கீடு மசோதா கொண்டுவருவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது” – சசி தரூர் விமர்சனம்

புதுடெல்லி: தனியார் துறையில் கன்னடர்களுக்கு வேலை இடஒதுக்கீட்டை கட்டாயமாக்கும் நோக்கம் கொண்ட மசோதா என்பது அரசியலமைப்புக்கு விரோதமானது, விவேகமற்றது என்று காங்கிரஸ் எம்.பி சசி தரூர் விமர்சித்துள்ளார். கர்நாடகாவில் கன்னடர்களுக்கு தனியார் நிறுவனங்கள் வேலை வழங்குவதை கட்டாயப்படுத்தும் நோக்கம் கொண்ட மசோதா குறித்த கேள்விக்கு பதில் அளித்த காங்கிரஸ் எம்பி சசி தரூர், “இது புத்திசாலித்தனமான முடிவு அல்ல. ஒவ்வொரு மாநிலமும் இதுபோன்று சட்டத்தை கொண்டுவந்தால் என்னாகும்? இது அரசியலமைப்புக்கு விரோதமானது. அரசியலமைப்பின் படி, ஒவ்வொரு குடிமகனுக்கும் … Read more

“2041-ல் அசாம் முஸ்லிம் பெரும்பான்மை மாநிலமாக மாறும்” – முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா

புதுடெல்லி: 2041ல் அசாம் முஸ்லிம் பெரும்பான்மை மாநிலமாக மாறும் என்று அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஹிமந்த பிஸ்வா சர்மா, “அசாமில் முஸ்லிம் மக்கள்தொகை பெருக்கம் அதிகரித்து வருகிறது. 2041க்குள் அசாம் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள மாநிலமாக மாறும். இது உண்மை. இதை யாராலும் தடுக்க முடியாது. அசாமில் ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் முஸ்லீம் மக்கள் தொகை சுமார் 30 சதவீதம் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் … Read more

கன்வார் யாத்திரை வழித்தட உணவக பெயர்ப் பலகை விவகாரம்: உ.பி. அரசுக்கு மாயாவதி கண்டனம்

புதுடெல்லி: உத்தரபிரதேசத்தில் கன்வார் யாத்திரை செல்லும் வழித்தடத்தில் உள்ள அனைத்து உணவகங்களுக்கும் அவற்றின் உரிமையாளர்களின் பெயர்களை காண்பிக்கும் பெயர்ப் பலகைகளை வைக்க வேண்டும் என்ற அம்மாநில அரசின் உத்தரவுக்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கன்வார் யாத்திரை வழித்தடத்தில் உள்ள வணிகர்கள் தங்கள் கடைகளில் உரிமையாளர் மற்றும் ஊழியர்களின் முழுப் பெயரையும் எழுத வேண்டும் என்று உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநில … Read more

பறிப்போகுமா யோகியின் முதல்வர் நாற்காலி? பாஜகவுக்குள் பரபரப்பு… கைமாறும் தலைவர் பதவி – ஏன்?

National News In Tamil: மக்களவை தேர்தலுக்கு பின் உத்தர பிரதேச பாஜகவுக்குள் பல்வேறு பரபரப்பு காட்சிகள் அரங்கேறும் நிலையில், உயர் மட்ட அளவில் மாற்றம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

“உரிமையாளர் பெயருடன் பலகை” – கன்வார் யாத்திரை வழித்தட உணவகங்களுக்கு உ.பி அரசு உத்தரவு

முசாபர்நகர்: உத்தரபிரதேசத்தில், கன்வார் யாத்திரை செல்லும் வழித்தடத்தில் உள்ள அனைத்து உணவகங்களுக்கும் அவற்றின் உரிமையாளர்களின் பெயர்களை காண்பிக்கும் பெயர்ப் பலகைகளை வைக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். உத்தராகண்ட், உத்தரபிரதேசம் போன்ற வட மாநிலங்களில் ஒவ்வோர் ஆண்டும் இந்துக்களின் ஷ்ரவண மாதத்தில் (ஜூலை – ஆகஸ்ட்) கன்வார் யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. இந்த யாத்திரை மேற்கொள்ளும் சிவ பக்தர்கள் கன்வாரியாக்கள் என அழைக்கப்படுகின்றனர். வட மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் உத்தராகண்ட் மாநிலத்தின் ஹரித்வார் உள்ளிட்ட … Read more

கேரளா லாட்டரி முடிவு: இன்று நிர்மல் NR-389 குலுக்கல்… முதல் பரிசு 70 லட்சம்!

Nirmal NR-389 Lucky Draw Result: இன்று மதியம் 3 மணிக்ககு நிர்மல் NR 389 லாட்டரி டிக்கெட்டுக்கான குலுக்கல் முடிவுகள் அறிவிக்கப்படும். முதல் பரிசு பெறுவோருக்கு  ரூ. 70 லட்சம் ரூபாய் கிடைக்கும்.

சுகாதாரம், வறுமை ஒழிப்பு, கல்வியில் தேசிய சராசரியைவிட தமிழகம் முன்னிலை: நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவல்

புதுடெல்லி: நிதி ஆயோக் வெளியிட்டுள்ள 2023-24 நிதி ஆண்டுக்கான ‘நிலையான வளர்ச்சி இலக்குகள்’ குறியீட்டில் தமிழ்நாடு 13 இலக்குகளில் முன்னிலை வகிக்கிறது. மொத்த இலக்குகளில் தமிழ்நாடு பெற்றிருக்கும் மதிப்பெண், தேசிய சராசரியைவிட அதிகம் ஆகும். தேசிய சராசரி மதிப்பெண் 71-ஆக உள்ள நிலையில் தமிழ்நாடு 78 மதிப்பெண் பெற்றுள்ளது. வறுமையின்மை, பட்டினி ஒழிப்பு, ஆரோக்கியம், தரமான கல்வி, பாலின சமத்துவம் உள்ளிட்ட 17 இலக்குகளை நிலையான வளர்ச்சிக் குறியீடாக ஐக்கிய நாடுகள் சபை நிர்ணயித்துள்ளது. இந்தியாவில் நிலையான … Read more

அம்பானி குடும்ப திருமண விழாவில் விருந்தினருக்கு வளையல் சன்கிளாஸ் இலவசம்

மும்பை: ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் திருமண விழாவில் பங்கேற்க வந்த விருந்தினர்களுக்கு இலவசமாக பொருட்களை வழங்க பிரத்யேகமாக கடைகள் திறக்கப்பட்டது தற்போது பேசுபொருளாகியுள்ளது. அம்பானி குடும்ப திருமண விழா மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. இதில், உள்நாட்டு பிரபலங்கள் மட்டுமின்றி வெளிநாட்டைச் சேர்ந்த முக்கிய அரசியல், விளையாட்டு,சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டனர். இந்த திருமணத்துக்காக ரூ.5,000 கோடி வரை செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது. திருமண விழாவுக்கு வந்த முக்கிய விருந்தினர்களுக்கு ரூ.1.5 … Read more

நேபாளத்தில் 2 பேருந்துகள் கவிழ்ந்த விபத்தில் 4 இந்தியர்கள் உட்பட 19 பேர் சடலமாக மீட்பு

புதுடெல்லி: நேபாளத்தில் பருவமழை தொடங்கி இருப்பதால் கனமழை பெய்து வருகிறது. இதனால், சித்வான் மாவட்டம் சிமல்தல் பகுதியில் நாராயண்காட்-மக்லிங் சாலையில் கடந்த 12-ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது அவ்வழியாக சென்ற 2 பேருந்துகள் நிலச்சரிவில் சிக்கி அருகில் உள்ள திரிசூலி ஆற்றுக்குள் கவிழ்ந்தன. இதில் ஒரு பேருந்து பிர்குஞ்ச் நகரிலிருந்து காத்மாண்டுக்கு சென்று கொண்டிருந்தது. இதில் 7 இந்தியர்கள் உட்பட 24 பேர் பயணம் செய்தனர். மற்றொரு பேருந்து 30 பயணிகளுடன் காத்மாண்டுவிலிருந்து கவுர் நகருக்கு … Read more