அக்.1 முதல் பொதுக்குழு, கிராம கூட்டங்கள்: பாமகவினருக்கு ராமதாஸ் உத்தரவு

சென்னை: வரும் அக். 1ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 6 நாட்களுக்கு பொதுக்குழு, கொடியேற்றும் நிகழ்ச்சிகள், ஒன்றிய, கிராம கூட்டங்கள் உள்ளிட்ட தொடர் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று பாமக நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து பாமக நிர்வாகிகளுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “மக்களவைத் தேர்தல்களை எதிர்கொள்வதற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்திட்டத்தின்படி, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் அக்டோபர் மாதத் தொடக்கத்தில், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் … Read more

காவல் அருங்காட்சியகத்தின் 2-ம் ஆண்டு நிறைவு விழா: அஞ்சல் அட்டை, சிறப்பு தபால் உறை வெளியீடு

சென்னை: சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள பழைய காவல் ஆணையர் கட்டிடம் சுமார் ரூ.6.47 கோடி செலவில் காவல் அருங்காட்சியகமாக புனரமைக்கப்பட்டு, முதல்வர் ஸ்டாலினால் கடந்த 2021-ம் ஆண்டு செப்.28-ம் தேதி திறக்கப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தின் 2-ம் ஆண்டு நிறைவு விழா நேற்று நடந்தது. நிறைவு விழாவை டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தொடங்கி வைத்தனர். பின்னர், சென்னை காவல் துறை சார்பில் நடத்தப்பட்ட மாறுவேடம், … Read more

நீர்வரத்து அதிகரிப்பால் 21 ஏரிகள் நிரம்பின: நிரம்பும் தருவாயில் செம்பரம்பாக்கம் ஏரி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 381 ஏரிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 528 ஏரிகளும், சென்னை மாவட்டத்தில் 16 ஏரிகளும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 93 ஏரிகளும், திருவள்ளூர் மாவட்டத்தில் 4 ஏரிகளும் என மொத்தம் 1,022 ஏரிகள் உள்ளன. இவற்றில் 38 ஏரிகள் நிரம்பியுள்ளன. வெளி மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 381 ஏரிகளில் 21 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. மேலும் 22 ஏரிகளில் 75 சதவீதத்துக்கும் அதிகமான … Read more

பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் பால் விற்க தடை கோரி வழக்கு: பதிலளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் பால் மற்றும் பால் பொருட்களை பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கத் தடை கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் நேற்று உத்தரவிட்டுள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வில் சமூக ஆர்வலர் அய்யா என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ஆவின் நிறுவனம்உள்ளிட்ட பால் பொருட்களை விற்பனை செய்து வரும் நிறுவனங்கள் பால் மற்றும் பால் பொருட்களை பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைத்து விற்று … Read more

தமிழகத்தில் 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (செப். 30) ஒரிரு இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அக். 1 முதல் 5-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 48மணி நேரத்தில் வானம் … Read more

‘இந்து தமிழ் திசை’, ‘வாக்கரூ’ இணைந்து ‘நற்சிந்தனை – நன்னடை’ சிறப்புமிகு நிகழ்வு

சென்னை: ஒவ்வொரு மனிதரையும் இயக்கும் சக்தியாக அவரது சிந்தனையே விளங்குகிறது. எப்போதும் நற்சிந்தனைகளுடன் இருக்கும் ஒருவர், நல்லதை மட்டுமே செய்வார். ஒருவருக்கு நற்சிந்தனை வரவேண்டுமெனில், அவரது எண்ணங்களை நெறிப்படுத்தி, வளப்படுத்தி, ஒருமுகப்படுத்துவதே ஆக்கப்பூர்வமான சிந்தனைக்கு வழிவகுக்கும். இதைத்தான் நம் முன்னோர்கள், ‘‘நல்லதையே நினைத்தால் நல்லதே நடக்கும்’’ என்றனர். சிறுவயதில் தாயின் மூலம் நற்சிந்தனையை பெறுகிறோம். யாருக்கும் ஒருபோதும் தீங்கிழைக்க கூடாது. நல்லவர்களோடு பழக வேண்டும். நல்லவற்றையே பேச வேண்டும். நல்ல புத்தகங்களை படிக்க வேண்டும். நல்லவை நடைபெறும்போது … Read more

சிவகாசி மாநகராட்சி கூட்டம் | துணை மேயர் உட்பட பெரும்பான்மை கவுன்சிலர்கள் புறக்கணிப்பு

சிவகாசி: சிவகாசி மாநகராட்சியில் நடந்த கவுன்சில் கூட்டத்தை துணை மேயர், 3 மண்டல தலைவர்கள் உட்பட பெரும்பான்மை கவுன்சிலர்கள் புறக்கணித்தனர். சிவகாசி மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் திமுக 24, கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 6, மதிமுக 1, விசிக 1 , என 32 இடங்களிலும், அதிமுக 11, பாஜக 1, சுயேச்சை 4 இடங்களிலும் வெற்றி பெற்றது. அதிமுக கவுன்சிலர்கள் 9 பேர் திமுகவில் இணைந்தனர். இதையடுத்து திமுகவைச் சேர்ந்த சங்கீதா மேயராகவும், விக்னேஷ்பிரியா … Read more

அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் வகையில் செயல்படும் சார்பதிவாளர்கள் மீது கடும் நடவடிக்கை – அமைச்சர் எச்சரிக்கை

மதுரை: ‘‘அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்படும் சார்பதிவாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி எச்சரிக்கை தெரிவித்தார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில், மதுரை பதிவு மாவட்டத்திற்குட்பட்ட சார்பதிவாளர்களின் பணி ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் பி.மூர்த்தி பேசியதாவது: மதுரை வருவாய் மாவட்டத்திற்குட்பட்டு மதுரை வடக்கு, மதுரை தெற்கு என இரு பதிவு மாவட்டங்கள் உள்ளன. … Read more