தடுப்புக் காவல் சட்டம் முதல் இஸ்ரேல் எதிர்ப்பு வரை: விசிக கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றம்

சென்னை: பட்டியல் சமூக மக்கள் மீதான வன்கொடுமைகள் தொடர்பான அனைத்து வழக்குகளிலும் எளிதில் பிணையில் வெளிவர இயலாத வகையில் தடுப்புக் காவல் சட்டத்தை பயன்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 தீர்மானங்கள், விசிக உயர்நிலைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை அசோக்நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில், கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் இன்று (நவ.20) உயர்நிலைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. … Read more

“தமிழக காங்கிரஸில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை”  – ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிருப்தி

ஈரோடு: “தமிழக காங்கிரஸில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை” என முன்னாள் மத்திய அமைச்சரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார். ஈரோட்டில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “காவிரி பிரச்சினையைப் பொறுத்துவரை எப்படி நமக்கு வயிற்றுப் பிரச்சினையாக உள்ளதோ, அதேபோல் கர்நாடகாவுக்கும் உள்ளது. எனவே, இப்பிரச்சினையை சுமுகமாக பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். ஆணையத்தில் தீர்வு கிடைக்கவில்லை என்றால், உச்ச நீதிமன்றத்தை நாடுவோம் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். தமிழக ஆளுநர் விருப்பம் போல், … Read more

மதுரை மாநகராட்சியில் வரி வசூல் பொறுப்பை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு

மதுரை: “மதுரை மாநகராட்சியில் வரி வசூல் மையங்களில் வரி வசூலிக்கும் பொறுப்பை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியது: “மாநகராட்சி 100 வார்டுகளில் ஒரே நேரத்தில் ரோடு, குடிநீர் குழாய் பதிப்பு, பாதாளச் சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதனால், பணிகள் உடனுக்குடன் முடிப்பதில் தாமதம் ஏற்படுகின்றன. வடகிழக்கு பருமழை பெய்து வருவதால், ரோடுகள் அமைக்கும் பணி தடைப்பட்டுள்ளது. அதனால், தற்போது வார்டுகளில் நிலவும் … Read more

‘ஜல் ஜீவன்’ இனி ‘இனிய குடிநீர்’… – மத்திய அரசின் திட்டங்களை தமிழில் குறிப்பிட தமிழிசை அறிவுறுத்தல்

புதுச்சேரி: மத்திய அரசின் திட்டங்களை கொண்டு செல்லும்போது வழக்கமாக அவற்றின் பெயர்கள் இந்தியிலேயே கூறப்படுகின்றன. இனிமேல் மத்திய அரசுத் திட்டங்களை மக்களிடையே தமிழில் மொழிபெயர்த்து அதிகாரிகள் குறிப்பிடவேண்டும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். மத்திய அரசுத் திட்டங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், விடுபட்ட திட்டப் பயனாளிகளை சேர்க்கவும் விழிப்புணர்வு வாகனப் பிரசாரம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. புதுச்சேரி அருகேயுள்ள திம்புநாயக்கன்பாளையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு புதுவை முதல்வர் ரங்கசாமி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் மத்திய … Read more

‘செந்தில் பாலாஜிக்கு ஆபத்து…’ என வாதம் – மருத்துவ அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவரது மருத்துவ அறிக்கைகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை வரும் இம்மாதம் 28-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்தன. இதையடுத்து, அவருக்கு ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் … Read more

‘இதில் என்ன தவறு?’ – தமிழக அரசு நியமித்த உண்மை சரிபார்ப்புக் குழுவுக்கு எதிரான வழக்கில் ஐகோர்ட் கேள்வி

சென்னை: “பொய்ச் செய்திகள் பரவுவதைத் தடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க முடியாதா? இது ஒரு தணிக்கை முறைதானே? இதில் என்ன தவறு ? காவல் துறைக்கு உதவுவதற்காகத்தானே இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது?” என்று தமிழக அரசு அமைத்துள்ள உண்மை சரிபார்ப்புக் குழுவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அனைத்து ஊடகத் தளங்களிலும் தமிழக அரசு, அமைச்சகங்கள், துறைகள், தொடர்பாக வெளிவரக்கூடிய தவறான செய்திகளை கண்டறியும் வகையில், அரசின் சிறப்புத் திட்ட … Read more

தமிழகத்தில் நிலங்களை அளக்க இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதி தொடக்கம்

சென்னை: நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை நிலஅளவை செய்ய இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதியை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இப்புதிய சேவையின் மூலம், நிலஅளவை கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல், இணையவழியிலேயே செலுத்தி விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.20) தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் நெய்வேலி பழுப்பு … Read more

டாஸ்மாக் மதுக் கடைகளை 3 நாட்களுக்கு மூட உத்தரவு @ திருவண்ணாமலை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி, திருவண்ணாமலை நகரம் காமராஜர் சிலை அருகே உள்ள டாஸ்மாக் மதுபானக் கடை (எண் – 9841), மணலூர்பேட்டை சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடை (எண் – 9261), வேங்கிக்கால் புறவழிச் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடை (எண் – 9490), பார்கள் உள்ள உணவகங்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான அங்காடி ஆகிய உரிமம் பெற்ற மதுபானக் கடைகள் மற்றும் … Read more

இபிஎஸ் தலைமையில் நாளை அதிமுக மாவட்டச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் கூட்டம்

சென்னை: சென்னையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில், நாளை (நவ.21) கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில், பூத் கமிட்டி; இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்தியதற்கான களப் பணி குறித்து மாவட்டப் பொறுப்பாளர்கள், … Read more

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரியில் ஓய்வில்லா மழையால் ஓய்வெடுத்த மக்கள்

திருநெல்வேலி / தென்காசி / தூத்துக்குடி / நாகர்கோவில்: திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் நவம்பர் தொடக்கத்தில் இருந்து வட கிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்தது. நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. நேற்று காலையில் இருந்து சில இடங்களில் பலத்த மழையும், மற்ற இடங்களில் மிதமான மழையும் பெய்தது. திசையன் விளையில் கனமழையால் சாலைகளில் ஆறு போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று … Read more