2024-ம் ஆண்டில் 24 நாட்கள் பொது விடுமுறை: தமிழக அரசு பட்டியல்

சென்னை: வரும் 2024-ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், மே தினம் உட்பட 24 பொது விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையில், மத்திய அரசின் உள்துறை விவகாரங்கள் அமைச்சகத்தின் 08.06.1957 நாளிட்ட பொது-1, 20-25-26 ஆம் எண் அறிவிக்கையின்படி, 1881-ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் (மத்திய சட்டம் XXVI/1881) 25-ஆம் பிரிவில் “விளக்கம்” என்பதன் கீழ், பொது விடுமுறை நாட்களாக குறிப்பிடப்பட்ட … Read more

வட மாநில தொழிலாளர் விவகாரம்: பிஹார் யூடியூபர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு

மதுரை: தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வதந்தி பரப்பிய பிஹார் யூடியூபர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிஹாரைச் சேர்ந்த யூடியூபர் மனிஷ்காஷ்யப். இவர் தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டார். இதனால் தமிழகம், பிஹாரில் பதற்றமான சூழல் உருவானது. பிஹார் அதிகாரிகள் தமிழகத்துக்கு நேரில் வந்து ஆய்வு நடத்தினர். இந்நிலையில், தமிழகத்தில் வட மாநிலத்தவர்கள் தாக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியதாக மனிஷ் … Read more

கரூர் மாநகர திரையரங்குகளில் கட்டணம் ரூ.130-லிருந்து ரூ.150 ஆக உயர்வு

கரூர்: கரூர் மாநகர ஏசி திரையரங்குகளில் கட்டணம் ரூ.130-லிருந்து ரூ.150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கரூர் மாநகரில் 3 திரையரங்க வளாகங்களில் தலா இரு திரையரங்குகள் என 6, இரு தனி திரையரங்கம் என மொத்தம் 8 திரையரங்குகள் உள்ளன. இவற்றில் 7 ஏசி திரையரங்குகளாகும். இவற்றில் இதுவரை ரூ.130 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. பிரபல நடிகர்கள் மற்றும் பிரமாண்ட படங்கள் வெளியாகும் போது ரூ.190 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு 3 புதிய திரைப்படங்கள் … Read more

தீபாவளி | கோவை – திண்டுக்கல் இடையே நவ.14 வரை முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள்

கோவை: தீபாவளியை முன்னிட்டு கோவை – திண்டுக்கல் இடையே வரும் 14-ம் தேதி வரை முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தீபாவளியை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் நாளை (நவ.11) முதல் வரும் 14-ம் தேதி வரை கோவை – திண்டுக்கல் இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி, கோவையில் இருந்து காலை 9.20 … Read more

பயிர் காப்பீடு திட்டத்தை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றம்

மதுரை: விவசாயிகளுக்கான பயிர் காப்பீடு திட்டத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும், அரசின் திட்டங்கள் அனைத்தும் விவசாயிகளிடம் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டையைச் சேர்ந்த ஜீவகுமார், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: ‘நாடு முழுவதும் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்துக்கு விவசாயிகள் 1.5 முதல் 5 சதவீத பணம் செலுத்தினால் போதும். நாடு முழுவதும் பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா திட்டத்தின் … Read more

' அரசியல் எதிரிகள் யாரோ கடிதம் எழுதிய பிறகுதான்…’ – உயர் நீதிமன்றத்தில் பொன்முடி தரப்பு வாதம்

சென்னை: அரசியல் எதிரிகள் கடிதம் எழுதியதன் அடிப்படையில் தனக்கு எதிரான வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேலூருக்கு மாற்றப்பட்டது என தகவல் கிடைத்துள்ளதாக அமைச்சர் பொன்முடி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1996-2001 திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்த பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.36 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக அவர் மீதும், அவருடைய மனைவி விசாலாட்சி உள்ளிட்ட குடும்பத்தினர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு … Read more

தி.மலை கோயில் ராஜகோபுரம் எதிரில் வணிக வளாகம் கட்ட உயர் நீதிமன்றம் தடை

சென்னை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலின் ராஜகோபுரம் எதிரில் அடுக்குமாடி வணிக வளாகம் கட்டும் அறநிலையத் துறை நடவடிக்கைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலின் கிழக்கு பகுதியில் உள்ள ராஜகோபுரத்துக்கு எதிரில் 6 கோடியே 40 லட்சம் மதிப்பில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அடுக்குமாடி வணிக வளாகம் கட்ட திட்டமிடப்பட்டு, பொதுப் பணித்துறையால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான வணிக வளாக கட்டிடத்தை வாடகைதாரர்கள் … Read more

அமர் பிரசாத் ரெட்டி உள்பட பாஜகவினர் 6 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது சென்னை ஐகோர்ட்

சென்னை: பாஜக கொடிக்கம்பம் அமைக்கும் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அக்கட்சியின் மாநில நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்பட 6 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பனையூரில் உள்ள பாஜக தலைவர் அண்ணாமலையின் வீடு அருகே சுமார் 50 அடி உயர கொடிக்கம்பம் நடுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்நிலையில், கடந்தஅக். 20-ம் தேதி நள்ளிரவு பாஜகவினருக்கும், அப்பகுதி மக்களுக்கும் இடையே எழுந்த பிரச்சினை காரணமாக, அங்கு கொடிக்கம்பம் … Read more

கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலை ஊழியர்களுக்கு 10% போனஸ்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் உள்ள 14 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலை பணியாளர்களுக்கு மிகை ஊதியமாக 8.33% மற்றும் கருணை தொகையாக 1.67% என மொத்தம் 10% போனஸ் வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வேளாண்மை – உழவர் நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் 16 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் உள்ளன. கரும்பு விவசாயிகளின் நலனை பாதுகாக்கவும், சாகுபடி பரப்பை அதிகரிக்கவும், சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை … Read more

திராவிட மாடல் ஆட்சியில் இந்தியாவுக்கே எடுத்துக்காட்டான மாநிலமாக தமிழகம் வளரும்: முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

சென்னை: “மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், 7 லட்சத்து 35 ஆயிரம் மகளிர் புதிய பயனாளிகள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் பயனாளிகளின் எண்ணிக்கை 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300- ஆக உயர்ந்துள்ளது. தகுதியுள்ள அனைவருக்கும் இந்த உரிமைத் தொகை கிடைக்கின்ற வரைக்கும், திராவிட மாடல் அரசின் இந்தப் பணி நிச்சயம் தொடரும். இதுதான் இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய வெற்றி. திராவிட மாடல் ஆட்சியில், இந்தியாவுக்கே எடுத்துக்காட்டான மாநிலமாக, தமிழ்நாடு தொடர்ந்து வளரும்” என்று தமிழக … Read more