வறண்டே கிடந்த வைகையின் துணை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு: வியந்து பார்க்கும் பொதுமக்கள்

தேனி: முற்றிலும் மழைநீரையே சார்ந்துள்ள வைகையின் துணை ஆறுகள் ஆண்டின் பல மாதங்கள் வறண்டே கிடக்கும். தற்போது பெய்து வரும் தொடர்மழையினால் இந்த ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குடியிருப்புப் பகுதிகளை கடந்து செல்லும் இந்த நீரோட்டத்தை பலரும் ஆர்வமுடன் வியந்து பார்த்து வருகின்றனர். தேனி மாவட்டம் வருசநாடு, அரசரடி மேற்குத் தொடர்ச்சி மலையில் மூலவைகை உற்பத்தியாகிறது. ஆண்டிபட்டி அருகே வைகை அணையில் இந்த நீர் தேக்கப்பட்டு தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களின் … Read more

“100 நாள் கூலித் தொழிலாளர்களுக்கு பாக்கி வைப்பது எல்லாம் ஓர் அரசா?” – கே.பாலகிருஷ்ணன் சாடல்

கடலூர்: மத்திய அரசின் ஸ்மார்ட் மின் மீட்டர் திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். மேலும், “100 நாள் கூலித் தொழிலாளர்களுக்கு பாக்கி வைக்கிற அரசாங்கம், என்ன அரசாங்கம்?” என்று அவர் வினவினார். சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர். கே.பாலகிருஷ்ணன் இன்று (நவ.6) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ”மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு ஸ்மார்ட் மின் மீட்டர் வைப்பதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு … Read more

மாலத்தீவில் கைதான மீனவர்களை மீட்க, அபராதத்தை ரத்து செய்ய நடவடிக்கை கோரி மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கடிதம்

சென்னை: “மாலத்தீவில் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் சார்பாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் உடனடியாகத் தலையிட்டு, மீன்பிடிப் படகுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்யவும், மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள், IND-TN-12-MM-6376 என்ற பதிவு எண் கொண்ட ‘ஹோலி ஸ்பிரிட்’ என்ற படகில் கடந்த 22-10-2023 அன்று மீன்பிடிக்கச் … Read more

”நான் யாரையும் நேரடியாக சொல்ல விரும்பவில்லை” – இலங்கை மலையகத் தமிழர் விழா குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு

விருதுநகர்: “இலங்கையில் நடைபெற்ற மலையகத் தமிழர்களின் 200-வது ஆண்டு விழாவில் என்ன காரணத்தால் தமிழக முதல்வரின் வாழ்த்துச் செய்தி ஒளிப்பரப்பவில்லை என்பது தெரியவில்லை” என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். இது குறித்து விருதுநகர் அருகே மல்லாங்கிணரில் உள்ள தனது இல்லத்தில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “இலங்கையில் மலையகத் தமிழர்களின் 200-வது ஆண்டு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் அழைக்கப்பட்டார். முதல்வர் அங்கு செல்ல இயலாத நிலையில் அந்த விழாவுக்கு நான் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. … Read more

புதுச்சேரி முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் உடல் அரசு மரியாதையுடன் தகனம் – ஆளுநர், முதல்வர் அஞ்சலி

புதுச்சேரி: புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கண்ணன் உடலுக்கு ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது. அவரது மறைவுக்கு மூன்று நாட்கள் அரசு துக்கம் அனுசரிக்கப்படுகிறது. புதுவை அரசியலில் முக்கியத் தலைவராக திகழ்ந்தவர் ப.கண்ணன். பேரவைத்தலைவர், அமைச்சர், மாநிலங்களவை எம்பி என அரசின் பல்வேறு பொறுப்புகளை வகித்தார். கடந்த 1ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக கண்ணன் மூலக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு … Read more

தீபாவளிக்கு மறுநாள் பொது விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு நவம்பர் 13-ம் தேதியும் விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்த ஆண்டு தீபாவளியை 12.11.2023 அன்று கொண்டாடும் பொருட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 13.11.2023 அன்று ஒருநாள் … Read more

அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைப்பு

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் தன்னை நீக்கியது செல்லாது என அறிவிக்கக் கோரி வி.கே.சசிகலா தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் தன்னை நீக்கியது செல்லாது எனஅறிவிக்கக் கோரி வி.கே.சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். சசிகலா தொடர்ந்திருந்த அந்த வழக்கை நிராகரிக்கக் கோரி ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் தாக்கல் செய்திருந்த … Read more

ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க ஒஎன்ஜிசி-க்கு அனுமதி தரக் கூடாது: இபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் சோதனைக் கிணறுகளை அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனம் கேட்டுள்ள அனுமதியை உடனடியாக திமுக அரசு நிராகரிக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் சோதனைக் கிணறுகளை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி ஓஎன்ஜிசி நிறுவனம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆணையத்திடம் கேட்டுள்ள அனுமதியை … Read more

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மருந்து விற்பனை மையத்தில் இன்சுலின் இல்லாததால் சர்க்கரை நோயாளிகள் அவதி

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் செயல்படும் தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தின் உயிர்காக்கும் மருந்துகள் விற்பனை மையத்தில் இன்சுலின் மருந்து இல்லாததால் சர்க்கரை நோயாளிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தினமும் நூற்றுக்கணக்கான சர்க்கரை நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் (TNMSC) மாத்திரை, மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை கொள்முதல் செய்து அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் வழங்கி வருகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கான இன்சுலின் மருந்து, சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கான விலை … Read more

'சனாதனம் குறித்த என் பேச்சில் தவறேதும் இல்லை; சட்டப்படி சந்திப்பேன்' – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: “சனாதனம் குறித்து நான் பேசியதில் எதுவும் தவறு கிடையாது. எதுவாக இருந்தாலும் சட்டப்படி சந்திப்போம். நான் பேசிய வார்த்தைகளை நான் மாற்றிக்கொள்ள மாட்டேன். எனது கொள்கையைத்தான் நான் பேசியிருக்கிறேன்” என்று தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தின் ஒரு பகுதியாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுக கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து வருகிறார். இன்று விசிக தலைவர் திருமாவளவனை சென்னை அசோக் நகரில் … Read more