தங்கம், வைரத்தை பூமியில் புதைத்து வைத்திருக்கும் சீமான்.. பகீர் புகாருடன் வந்த விஜயலட்சுமி

சென்னை: வெளிநாடுகளில் இருந்து வந்த தங்கம், வைரப் பொருட்களை சீமான் பூமிக்குள் புதைத்து வைத்திருப்பதாக நடிகை விஜயலட்சுமி அதிரடியாக தெரிவித்துள்ளார். மேலும், அவர் அதை எங்கே புதைத்து வைத்துள்ளார் என்பதையும் கூறியுள்ள விஜயலட்சுமி, இதுதொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் ஒரு கோரிக்கையை வைத்துள்ளார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும், முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இதனிடையே, இந்த திருமணத்திற்கு முன்பே … Read more

மேச்சேரி அருகே மீன் வளத்தை பெருக்க குடிநீர் குழாயை உடைத்து ஏரியில் நீர் நிரப்பியதாக மக்கள் குற்றச்சாட்டு

மேட்டூர்: மேச்சேரி அருகே ஆண்டியூர் வரட்டு ஏரியில் மீன் வளத்தைப் பெருக்க, குடிநீர் குழாயை உடைத்து நீர் நிரப்பியதாக ஊராட்சித் தலைவர் மீது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே கொப்பம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஆண்டியூர் வரட்டு ஏரி உள்ளது. இந்த ஏரியை ஒட்டி 13-க்கும் மேற்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு குழாய் மூலமாக போர் மூலமாகவும், குடிநீர் திட்டம் மூலமாகவும் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகின்றன. இதனிடையே, இந்த ஏரியில் மீன் வளத்தைப் பெருக்கவும், … Read more

அடுத்த ட்விஸ்ட்.. சிக்கலில் சிக்கிய ஓபிஎஸ் – சொத்துக் குவிப்பு வழக்கை தோண்டி எடுத்த நீதிமன்றம்!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிரான வழக்கை தாமாக முன்வந்து விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. 2001ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரை நடைபெற்ற அதிமுக ஆட்சியில் முதலமைச்சராகவும், வருவாய் துறை அமைச்சராகவும் இருந்த பதவி வகித்தார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வருமானத்திற்கு அதிகமாக 1.72 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக மீது வழக்கு தொடரப்பட்டது. அதாவது, ஓ.பன்னீர்செல்வம் தனது மனைவி விஜயலட்சுமி, மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப், மகள் கவிதா பானு மற்றும் … Read more

கிராமங்களில் மினி பஸ் சேவையை தமிழக அரசு அதிகரிக்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

கோவை: கிராமப்புறங்களை மையப்படுத்தி நகரப் பகுதிகளுக்கு இயக்கப்படும் மினி பேருந்துகளின் சேவையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு விவசாய சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கோவையில் இன்று (ஆக.30) செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தமிழகத்தில் கடந்த 1996-2001ம் ஆண்டு காலகட்டத்தின் போது மினி பேருந்து சேவை அறிமுகமானது. அரசு பேருந்து நேரடியாக இயக்க முடியாத தொலைதூர கிராமப் பகுதிகளுக்கு இந்த மினி பேருந்து இயக்கப்பட்டது. விவசாயிகள், பணிக்கு செல்பவர்கள், … Read more

அப்கிரேட் ஆகும் TNSTC பேருந்துகள்… விடியல் பயணம் டூ ஆன்லைன் புக்கிங்… பெருசா பிளான் போட்ட தமிழக அரசு!

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் இன்று தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் அமைச்சர் சிவசங்கர் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். இதுதொடர்பாக போக்குவரத்து துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி ஐஏஎஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தை வழங்கும் ’விடியல் பயணத் திட்டம்’ வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு போக்குவரத்து கழக செயல்பாடுகள்இதனை … Read more

அமைச்சர்கள் சக்கரபாணி, பெரியசாமி எதிரான வழக்கில் விரைவில் இறுதி விசாரணை

பொங்கல் பரிசு வழங்கியதில் முறைகேடு செய்ததாக அமைச்சர்கள் சக்கரபாணி, ஐ. பெரியசாமி ஆகியோருக்கு எதிரான புகாரில் நடவடிக்கை எடுக்க லோக் ஆயுக்தா அமைப்பிற்கு உத்தரவிடக் கோரிய வழக்கை இறுதி விசாரணைக்காக செப்டம்பர் 11ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.  

4 ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணை நீர்மட்டம் 51 அடியாக சரிவு

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் 4 ஆண்டுகளுக்கு பிறகு 51 அடியாக சரிந்துள்ளது. பருவமழை பெய்யாததாலும், கர்நாடக மாநில அணைகளில் இருந்து உரிய தண்ணீர் திறந்து விடப்படாததாலும் நீர்மட்டம் சரிவை சந்தித்துள்ளது. மேட்டூர் அணை காவிரி டெல்டா பாசனத்துக்கான முக்கிய நீர்த்தேக்கப் பகுதியாக விளங்கி வருகிறது. டெல்டா மாவட்டங்களில் 16 லட்சம் ஹெக்டேர் நிலம் மேட்டூர் அணையால் பாசன வசதி பெற்று வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி டெல்டா பாசனத்துக்கு நீர் … Read more

ஐஏஎஸ் அதிகாரியே மிரட்டப்பட்டால்.. பொதுமக்கள் நிலைமையை யோசிச்சு பாருங்க.. ஜெயக்குமார் சுளீர்

சென்னை: சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனிடம் திமுகவினர் சிலர் பணம் கேட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி, தமிழக அரசை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். “ஒரு ஐஏஎஸ் அதிகாரியே கட்சிக்காரர்களால் மிரட்டப்படுகிறார்கள் என்றால் பொதுமக்களின் நிலைமை என்னவாகும்?” எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார். சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் சில தினங்களுக்கு முன்பு அண்ணாநகர் டவர் பார்க் பூங்காவில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அங்கிருந்த திமுகவினர் சிலர், “தொகுதி எம்எல்ஏவுக்கும், … Read more

முருங்கை மரத்துக்கு சேலை கட்டினால்கூட திமுகவினர் விட மாட்டார்கள் – ஜெயக்குமார் விளாசல்

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாவனர்கள் திமுகவினர் தான், முருங்கை மரத்துக்கு சேலை கட்டினால் கூட அவர்கள் விட மாட்டார்கள் என அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமார் கடுமையாக விளாசியுள்ளார்.   

மகளிர் உரிமைத் தொகைக்காக ஆதார் இணைப்புடன் வங்கிக் கணக்கு: அஞ்சல் துறை சிறப்பு ஏற்பாடு

சென்னை: மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியுள்ள பயனாளிகளுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக் கணக்கு அவசியம் என்பதால், அருகில் உள்ள அஞ்சலகங்கள், தபால்காரர், கிராம அஞ்சல் ஊழியரை அணுகி, இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கிக் கணக்கு துவங்கி பயன்பெறலாம் என்று அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அஞ்சல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக அரசு அறிவித்துள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியுள்ள பயனாளிகளுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக் கணக்கு … Read more