டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபு நியமனம்: அரசு பரிந்துரையை ஆளுநர் மீண்டும் நிராகரிப்பு

சென்னை: ‘டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபுவை நியமிக்கும் நடைமுறையில் வெளிப்படைத் தன்மை இல்லை. எனவே, வேறொருவரை தலைவராக பரிந்துரைக்க வேண்டும்’ என்று தெரிவித்து, இதுதொடர்பான கோப்பை தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் திருப்பி அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழக டிஜிபியாக இருந்து கடந்த ஜூன் 30-ம் தேதி ஓய்வுபெற்ற சைலேந்திர பாபுவை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தலைவராக நியமிக்க தமிழக அரசு முடிவெடுத்தது. அத்துடன் அதன் … Read more

குலசேகரன்பட்டினத்தில் சூரசம்ஹாரம் கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவில் நேற்று நள்ளிரவு சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா விழா, கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோயிலில் தினமும் இரவு 10 மணிக்கு அம்மன் பல்வேறுதிருக்கோலங்களில் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று நள்ளிரவு குலசேகரன்பட்டினம் கடற்கரையில் நடைபெற்றது. இதற்காக நேற்று முன்தினம் மாலையில் இருந்தே பல்வேறு ஊர்களில் இருந்து … Read more

''தேர்தல் வாக்குறுதிகளை 100% நிறைவேற்றிவிட்டதாகக் கூறுவதா?'' – மு.க. ஸ்டாலினுக்கு இபிஎஸ் கண்டனம்

சென்னை: “29 மாதகால திமுக ஆட்சியில், தமிழக மக்களுக்கு கொண்டுவரப்பட்ட திட்டங்கள் என்ன என்று கேட்டால், திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட வாக்குறுதிகளை 100 சதவீதம் நிறைவேற்றிவிட்டதாக தமிழக முதல்வர் மக்களிடையே பொய் பேசுகிறார். ஏனெனில், 29 மாத கால ஆட்சியில் தமிழக மக்களின் நலனுக்காக ஸ்டாலின் எந்தத் திட்டத்தையும் அறிவிக்கவில்லை; செயல்படுத்தவில்லை” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக தலைவர், பொம்மை முதல்வர் ஸ்டாலின், அவரது … Read more

பேச்சுவார்த்தையில் உடன்பாடு – ஆம்னி பேருந்துகள் வேலை நிறுத்தம் வாபஸ்

சென்னை: போக்குவரத்து துறை அதிகாரிகள் உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை ஆகிய தொடர் விடுமுறையையொட்டி, ஏராளமான பொதுமக்கள் அரசுப் பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் மூலம் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில், கூடுதல் கட்டண புகார் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக தமிழகம் முழுவதும் 120 ஆம்னி பேருந்துகளை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சிறைபிடித்துள்ளனர். இந்த பேருந்துகளை … Read more

அமமுக செயற்குழு கூட்டத்தின் தேதி அறிவிப்பு

சென்னை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழுக் கூட்டம் வருகின்ற நவம்பர் 4ம் தேதி திருச்சியில் நடைபெற உள்ளதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிவிப்பில், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மக்கள் நலக்கொள்கைகளைத் தொடர்ந்து நிலைநாட்டிட போராடி வரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு கூட்டம் கழகத் தலைவர் C.கோபால் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) தலைமையில் வருகிற 04.11.2023 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் திருச்சி, ஃபெமினா ஹோட்டலில் உள்ள … Read more

தேசிய நீச்சல் போட்டிக்கு மதுரை பள்ளி மாணவன் தேர்வு

மதுரை: தேசிய அளவிலான நீச்சல் போட்டிக்கு மதுரையை சேர்ந்த பிளஸ் 2 மாணவன் எம்.பூபாலன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையேயான, தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, தெலங்கானா மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளை உள்ளடக்கிய தென்மண்டல நீச்சல் போட்டிகள் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் எஸ்எஸ்விஎம் பள்ளியில் அக்டோபர் 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் மதுரை மகாத்மா குளோபல் கேட்வே பள்ளியில் பிளஸ் 2 மாணவன் எம்.பூபாலன், 19 வயதிற்குட்பட்ட பிரிவில் 3 தங்கம், … Read more

13 ஆண்டு பணியில் 12 முறை இடமாறுதல்: வருவாய் ஆய்வாளரை மீண்டும் பணியில் சேர்க்க நீதிமன்றம் உத்தரவு

மதுரை: பணியில் சேர்ந்த 13 ஆண்டுகளில் 12 முறை இடமாறுதல் செய்யப்பட்டு இறுதியில் பணி நீக்கம் செய்யப்பட்ட வருவாய் ஆய்வாளரை மீண்டும் பணியில் சேர்க்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு. என் தந்தை விஸ்வாம்பரன் கிராம உதவியாளராக பணிபுரித்தார். அவர் பணியில் இருந்தபோது இறந்தார். இதனால் எனக்கு கருணை அடிப்படையில் 13.12.2006-ல் கிராம உதவியாளர் பணி வழங்கப்பட்டது. 13 ஆண்டுகளில் என்னை 12 … Read more

மேட்டூர் காவிரி ஆற்றில் மீன்வளத் துறைக்கு சொந்தமான விசைப்படகை எரித்த மர்ம நபர்கள்: போலீஸார் விசாரணை

மேட்டூர்: மேட்டூர் அருகே காவிரி ஆற்றில் மீன்வளத் துறைக்கு சொந்தமான விசைப்படகுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் மேட்டூர் அணை நீர் தேக்கம் 60 மைல் பரப்பளவைக் கொண்டுள்ளது. அணையில் ஒவ்வொரு ஆண்டும் 75 லட்சம் மீன் குஞ்சகள் மீன்வளத்துறை சார்பில் விடப்பட்டு வளர்க்கப்படுகிறது. இந்த மீன் குஞ்சுகளை உரிமம் பெற்ற 2 ஆயிரம் மீனவர்களைக் கொண்டு பிடிக்கப்பட்டு … Read more

டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனப் பரிந்துரையை காழ்ப்புணர்ச்சியுடன் ஆளுநர் நிராகரித்துள்ளார்: மார்க்சிஸ்ட்  குற்றச்சாட்டு

சென்னை: “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற டிஜிபி சைலேந்திரபாபுவை நியமிக்க வேண்டும் என்ற தமிழக அரசிந் பரிந்துரையை, தமிழக ஆளுநர் வேண்டுமென்றே அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் நிராகரித்துள்ளார்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற டிஜிபி சைலேந்திரபாபுவையும், உறுப்பினராக சிவக்குமாரையும் நியமிக்க வேண்டுமென தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் ஆர்.என். ரவி நிராகரித்துள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் … Read more

திடீர் குபீர் நாட்டுப்பற்றாளர்களின் வரலாற்றை காந்தியடிகளின் இறுதி நாட்கள் சொல்லும் – முதல்வர் ஸ்டாலின் சாடல்

சென்னை: “திமுக அரசு அமையும்போதெல்லாம் விடுதலை வீரர்களின் புகழ் திக்கெட்டும் போற்றப்படுகிறது. நஞ்சு தோய்ந்த எண்ணங்களோடு நயமாகப் பேசும் திடீர் குபீர் நாட்டுப்பற்றாளர்களின் வரலாற்றைத் தேசத் தந்தை காந்தியாரின் இறுதி நாட்கள் சொல்லும். இந்த கோட்சே கூட்டத்தைத்தான் மகாகவி பாரதியார் ‘நடிப்புச் சுதேசிகள்’ எனப் பாடினார்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ் நிலத்தின் உரிமைகளைக் காக்கத் தங்கள் உயிரையும் துச்சமென நினைத்த மான … Read more