தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று (அக். 18) இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென் தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை … Read more

சிவகாசி அருகே பட்டாசு கடை, ஆலையில் வெடி விபத்துகள்: 12 பெண்கள் உட்பட 14 பேர் உயிரிழப்பு

சிவகாசி: சிவகாசி அருகே ரெங்கபாளையம் கம்மாபட்டியில் பட்டாசு பரிசுப் பெட்டி பேக்கிங் செய்யும்போது ஏற்பட்ட தீ விபத்தில் 12 பெண்கள் உட்பட 13 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். மாரனேரி கீச்சநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் பட்டாசு மருந்து கலவை தயாரித்தபோது, வெடி விபத்து ஏற்பட்டதில், ஒருவர் உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கங்காகுளத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவர் ரெங்கபாளையம் கம்மாபட்டியில் கனிஷ்கர் ஃபயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி … Read more

மதுரை மாநகராட்சியில் 3 ஆண்டுகளில் 4 ஆணையாளர்கள் இடமாற்றம் – அடிக்கடி மாற்றம் ‘நிகழ்வது’ ஏன்?

மதுரை: கடந்த மூன்று ஆண்டுகளில் மதுரை மாநகராட்சியில் நான்கு ஆணையாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது உள்ள மாநகராட்சி ஆணையாளர் பிரவீன்குமார், பொறுப்பேற்ற 4 மாதத்திலேயே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்த நிலையில், 2021-ம் ஆண்டு ஜூனில் மதுரை மாநகராட்சி ஆணையாளராக இருந்த விசாகன், பதவி உயர்வு பெற்று திண்டுக்கல் ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பிறகு வந்த மாநகராட்சி ஆணையாளர்கள் யாரும் நிலையாக மதுரையில் இருந்து இல்லை. விசாகனுக்கு பதிலாக … Read more

அனுமதியின்றி ‘லியோ’ படத்துக்கு பேனர், பிளக்ஸ் வைக்கக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: ‘அனுமதியில்லாமல் லியோ படத்துக்கு பேனர், பிளக்ஸ் வைக்கக் கூடாது’ என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக திண்டுக்கல்லை சேர்ந்த ராஜா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், “திண்டுக்கல் ரவுண்ட் ரோடு புதூர் பகுதியில் இரு தியேட்டர்கள் உள்ளன. இங்கு அக். 19-ல் நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் வெளியாகிறது. இதையொட்டி விஜய் ரசிகர்கள் தியேட்டர்கள் முன்பு உயரமான, நீளமான பதாகை மற்றும் கட்அவுட் வைப்பார்கள். பட்டாசுகள் வெடிக்கப்படும். இதனால் பொதுமக்களுக்கு … Read more

தென்னிந்திய இளையோர் தடகள போட்டி: வெண்கலம் வென்று தி.மலை மாணவர் சாதனை

திருவண்ணாமலை: தெலங்கானா மாநிலத்தில் நடைபெற்ற 34-வது தென்னிந்திய இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் டிரையத்லான் பிரிவில் 1,425 புள்ளிகளை பெற்று திருவண்ணாமலை மாணவர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். ஓடு… ஓடு… வாழ்க்கையின் எல்லை வரை ஓடிக்கொண்டே இரு என்பார்கள். இவ்வாக்கியம், தடகள வீரர்களுக்கான ‘தாரக மந்திரம்’. ஓடுவது மட்டுமல்ல, வேகமாக… அதி வேகமாக என இலக்கை அடையும் வரை ஓட வேண்டும். நொடி பொழுதில் நிலை மாறிவிடும் என கூறுவதுபோல், ஒரு விநாடியில் பதக்கத்தை தவறவிடுவது, ஓட்டப்பந்தயத்தில் … Read more

கொடைக்கானல் | பச்சை இலை சிவப்பு நிறமாக மாறும் வினோத தாவரம்: சுற்றுலா பயணிகள் வியப்பு

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பச்சை இலை சிவப்பு வண்ணமாக மாறும் ‘பாய்ன் செட்டியா’ எனும் வினோத தாவரம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் பல்வேறு கால நிலைகளில் பூக்கும் பூச்செடிகள், தாவரங்கள் உள்ளன. தற்போது பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள வட அமெரிக்கா நாடான மெக்சிகோவை தாயகமாக கொண்ட ‘பாய்ன் செட்டியா’ தாவரத்தின் பச்சை இலைகள் சிவப்பு வண்ணமாக உருமாறி மலர் போன்று ரம்மியமாக காட்சியளிக்கிறது. ஆண்டுதோறும் அக்டோபர் முதல் டிசம்பர் … Read more

நியோமேக்ஸ் மோசடி வழக்கை ரத்து செய்ய அரசு வழக்கறிஞர் ஆட்சேபம்

மதுரை: நியோமேக்ஸ் மோசடி வழக்கை ரத்து செய்ய அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட நிறுவனம் நியோமக்ஸ். இந்த நிறுவனம் கூடுதல் வட்டி மற்றும் வீட்டு மனை தருவதாக கூறி பல்வேறு போலி நிறுவனங்கள் பெயரில் பொதுமக்களிடம் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் கோவில்பட்டியைச் சேர்ந்த ஜெயசங்கரேஸ்வரன் புகார் அளித்தார். இதன்பேரில் போலீஸார் நியோமேக்ஸ் நிறுவனர் பாலசுப்பிரமணியம் உட்பட பலர் மீது … Read more

கணவரின் ரத்த உறவுகள் மீது மட்டுமே வரதட்சிணை வழக்கு பதிய முடியும்: உயர் நீதிமன்றம்

மதுரை: கணவரின் ரத்த உறவுகள் மீது மட்டுமே வரதட்சிணை வழக்கு பதிய முடியும் என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்த அழகர்சாமி, கருப்பாயி என்ற பொன்னழகு, பாலகிருஷ்ணன் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், “எங்கள் ஊரைச் சேர்ந்த வனிதா என்பவர் 2020-ல் அவர் கணவர் மீது போலீஸில் வரதட்சிணை புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் எந்தத் தொடர்பும் இல்லாத எங்களையும் … Read more

அக்.30-க்கு முன்பு ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி கூடாது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

மதுரை: மருது சகோதரர்கள் குருபூஜை, தேவர் குருபூஜை போன்ற நிகழ்வுகளால் அக்டோபர் 30-க்கு முன்பு ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி கொடுக்க வேண்டாம் என உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் 20 இடங்களில் விஜயதசமி நாளான அக்டோபர் 22-ல் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் நீதிபதி இளங்கோவன் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு … Read more

மதுரையில் 40 ஏக்கர் ரயில்வே நிலத்தை தனியாருக்கு விற்க முயற்சி: சு.வெங்கடேசன் எம்.பி குற்றச்சாட்டு

மதுரை: மதுரையில் ரூ.1,200 கோடி மதிப்பிலான 40.61 ஏக்கர் ரயில்வே நிலத்தை தனியாருக்கு விற்கும் முயற்சியை ரயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இன்று அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “இந்தியாவின் முக்கியமான நகரங்களில் இருக்கும் ரயில்வே நிலங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறோம். அதன்படி மதுரை அரசரடியிலுள்ள … Read more