சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரி நியமனம்: குடியரசுத் தலைவர் உத்தரவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரியை நியமித்துகுடியரசுத் தலைவர் உத்தரவிட் டுள்ளார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த சஞ்ஜிப் பானர்ஜி, மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். அதையடுத்து அலகாபாத் உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியான முனீஷ்வர்நாத் பண்டாரி, சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக கடந்தாண்டு நவம்பர் மாதம் பதவி யேற்றார். கொலீஜியம் பரிந்துரை இந்நிலையில், முனீஷ்வர்நாத் பண்டாரியை சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க … Read more

“90% காவல்துறை அதிகாரிகள் ஊழல்வாதிகளாக, திறமையற்றவர்களாக உள்ளனர்”- உயர்நீதிமன்றம் வேதனை

காவல் துறையில் 90 சதவீத அதிகாரிகள் ஊழல்வாதிகளாகவும், திறமையற்றவர்களாகவும் உள்ளதாக வேதனை தெரிவித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். காவல்துறையில் ஊழல் அதிகாரிகளை களைந்து, திறமையற்ற அதிகாரிகளுக்கு போதிய பயிற்சி வழங்க வேண்டிய சரியான தருணம் இது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்னதாக சில மாதங்களுக்கு முன் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தி என்பவர், நில விற்பனை தொடர்பாக நடேசன், ராஜவேலு ஆகியோருக்கு எதிராக மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். இந்த புகாரை விசாரித்த போலீசார், தவறான புகார் … Read more

மஞ்சள், அவுரிநெல்லி, காளான்… புற்றுநோயை தடுக்கும் 5 சூப்பர்ஃபுட்கள்!

 Foods to help lower your cancer risk tamil: சில உணவுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பண்புகளைக் கொண்டவையாக உள்ளன. ஆனால், ஒரு குறிப்பிட்ட வகை உணவு புற்றுநோயைத் தடுக்கும் அல்லது நிறுத்தும் என்பதற்கு உறுதியான ஆதாரம் ஏதும் இல்லை. காய்கறிகள் மற்றும் பழங்களின் ஆரோக்கியமான உணவு, இதய நோய், நீரிழிவு மற்றும் சாத்தியமான புற்றுநோய் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க நோய்களைத் தடுப்பதில் முக்கியமானவையாக உள்ளன. ஒவ்வொருவரும் எந்த வகையான உணவைத் தவிர்க்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் தங்கள் … Read more

சென்னை, சேலம், திருச்சி, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் 24 பேர் கட்சியில் இருந்து நீக்கம்.. ஓபிஎஸ், இபிஎஸ் அதிரடி.!

சென்னை, சேலம், திருச்சி, தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புற தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு எதிராக செயல்பட்ட புகாரில் அதிமுகவினர் 24 பேர் கட்சியில் இருந்து நீக்கி, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வட சென்னை வடக்கு (கிழக்கு), சென்னை புறநகர், சேலம் மாநகர், திருப்பூர் புறநகர் கிழக்கு, திருச்சி மாநகர், திருச்சி புறநகர் தெற்கு, தூத்துக்குடி வடக்கு மாவட்டங்கள் கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்களை கவரும் வகையில் வித விதமான முறைகளில் பிரச்சாரம் <!– நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்களை கவரும் வகையில… –>

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வாக்காளர்களை கவரும் வகையில் வித விதமான முறைகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டர். முன்னதாக வாக்காளர்களை கவரும் வகையில் நடன கலைஞர்கள் நடனமாடினர்.   ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி 21வது வார்டில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் அபூபக்கர் சித்திக் உடலில் வண்ண விளக்குகளையும், பந்துகளையும் கட்டிக் கொண்டு ஊர்வலமாக … Read more

கடந்த டிசம்பரில் இலங்கை கடற்படை கைது செய்த 9 மீனவர்கள் சென்னை திரும்பினர்: தனி வாகனத்தில் சொந்த ஊருக்கு அனுப்பிவைப்பு

சென்னை: இலங்கை கடற்படையினரால் கடந்த டிசம்பர் மாதம் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களில் 9 பேர்நாடு திரும்பினர். அவர்கள் சொந்தஊருக்கு அனுப்பி வைக்கப்பட்ட னர். ராமேசுவரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள், கடந்த ஆண்டு டிச.18-ம் தேதி, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அதற்கு அடுத்த நாளும் பல மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். 2 நாட்களில் 56 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை மீட்க மத்திய, மாநிலஅரசுகள் நடவடிக்கை … Read more

‘யங்’ ரஜினி ‘தலைவர் 169’ படத்தின் அறிவிப்பு வெளியீடு

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அவருடைய புதிய படமான ‘ரஜினி 169’ அறிவிப்பு வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்திருந்த அண்ணாத்த திரைப்படம் வெளியாகி இருந்தது. இதையடுத்து, ரஜினிகாந்த் நடிக்கும் அவருடைய 169வது படத்தைப் பற்றிய அறிவிப்பு ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அப்படி அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. ரஜினிகாந்த்தின் அடுத்த படத்தை இயக்குனர்கள் கார்த்திக் சுப்பராஜ், நெல்சன், சிறுத்தை … Read more

கல்வி கற்கும் இடத்தில் மதத்தைக் புகுத்துவது தீவிரவாதத்தை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.. விஜயகாந்த்.!!

கல்வி கற்கும் இடத்தில் மதத்தைக் புகுத்துவது தீவிரவாதத்தை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் கல்லூரியில், ஹிஜாப் அணிந்து சென்ற சம்பவத்தால் அங்கு மிகப்பெரிய கலவரம் வெடித்துள்ளது.   கல்வி கற்கும் இடத்தில் அனைவரும் சமம் என்ற உணர்வு வரவேண்டும் என்பதற்காகத்தான் மாணவர்களுக்கு சீருடை என்ற திட்டமே கொண்டு வரப்பட்டது. கல்விக்கும் மதத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. … Read more

தாயாருடன் துணி துவைக்க சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து 2 சிறுமிகள் உயிரிழப்பு <!– தாயாருடன் துணி துவைக்க சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து … –>

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே தாயாருடன் துணி துவைக்க சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து 2 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காவேரிப்பாக்கம் அடுத்த கன்னிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ரேகா தனது 8 மற்றும் 12 வயது குழந்தைகளை அழைத்துக்கொண்டு தன் அண்ணன் வீட்டருகே உள்ள கிணற்றில் துணி துவைக்கச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, கிணறு அருகே விளையாடிக்கொண்டிருந்த இரு குழந்தைகளும் அடுத்தடுத்து தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது. குழந்தைகளை காப்பாற்ற ரேகாவும் … Read more