அதிர்ச்சி செய்தி கொடுத்த இந்திய வானிலை மையம்..!!

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை பெய்யும் தென்மேற்குப் பருவமழையானது வழக்கம் போல சற்று தாமதமாகவே தொடங்கும். ஜூன் மாதத்தில் இயல்பு அளவை விடவும் குறைவான மழையே இருக்கும். இந்த மழைக் காலத்தில் இயல்பை விட அதிகமாக மழை பெய்ய 55 சதவிகித வாய்ப்புகள் உள்ளது. எல் நினோ காரணமாக, வரும் பருவமழைக் காலத்தில் குறைவான மழை கிடைக்கும் அபாயமும் உள்ளது. பல வழிகளில் ஆராய்ந்து பார்த்ததில், … Read more

8 ஆண்டுகளாக முழுமை பெறாமல் இருந்த திருச்சி அரிஸ்டோ இரயில்வே மேம்பாலம் இன்று திறப்பு..!!

திருச்சி ரயில்வே சந்திப்பில் அகலம் குறைந்த ரயில்வே மேம்பாலத்திற்கு பதிலாக புதிய மேம்பாலம் அமைக்கும் பணி இரண்டு கட்டங்களாக கட்டி முடிக்க திட்டமிடப்பட்டது. 2014 ஆம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக அரிஸ்டோ ரவுண்டானாவை மையமாக வைத்து திண்டுக்கல் சாலை, மத்திய பேருந்து நிலையம், ரயில்வே சந்திப்பு ஆகியவற்றை இணைக்கும் வகையில் பாலம் கட்டும் பணி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏற்கனவே கொண்டுவரப்பட்டது. ஆனால் சென்னை – மதுரை தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையிலான மன்னார்புரம் … Read more

சர்வதேச இந்தியா திரைப்பட விழாவில் நடிகர் கமலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது..!!

இந்த ஆண்டுக்கான சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருது வழங்கும் விழா அபுதாபியில் நடைபெற்றது. இந்த விழாவில் இந்தி திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர், நடிகைகள் மற்றும் பல்வேறு திரை பிரபலங்கள் பங்கேற்றனர். இந்த பிரமாண்ட விழாவில், தமிழ் சினிமாவில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தனது அசாத்திய திறமையால் மக்களை மகிழ்வித்து வரும் நடிகர் கமல்ஹாசனின் சாதனையை பாராட்டும் விதமாக சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி, நடிகர் கமலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்தது. நடிகர் … Read more

ஏழை மக்களுக்கு சுட சுட பிரியாணி, முட்டை உணவளித்த விஜய் மக்கள் இயக்கம்..!!

பட்டினியால் வாடும் மக்களை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு மே 28-ம் தேதி உலக பட்டினி தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், உலக பட்டினி தினத்தை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏழை மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. சுடச்சுட பிரியாணி, முட்டை, கறி குழம்புடன் மதிய உணவு வழங்கப்பட்டது. இது தொடர்பாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகி கூறுகையில், உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தளபதி விஜயின் சொல்லுக்கிணங்க தமிழகத்தில் … Read more

எங்களை யாராலையும் அச்சுறுத்த முடியாது: வருமான வரித்துறை புலனாய்வு இயக்குநர்

மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமாருக்குச் சொந்தமான கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிட சென்றபோது தாக்கப்பட்டனர். இதையடுத்து அவர்கள் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் அவர்களை சென்னை வருமான வரித்துறை புலனாய்வுப்பிரிவு இயக்குநர் சிவசங்கர் நேரில் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவசங்கரன், ”சோதனைக்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகளை அங்கிருந்தவர்கள் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் வருமான … Read more

இந்த வார இறுதியில் பள்ளி மாணவர்களை சந்திக்கும் தளபதி விஜய்..!!

நடிகர் விஜய் கடந்த சில ஆண்டுகளாகவே நலத்திட்ட உதவிகள் போன்றவற்றை அவரது ரசிகர்கள் மன்ற நிர்வாகிகள் மூலம் தொடர்ந்து செய்து வருகிறார். ஆடியோ விழாக்களில் மட்டும் அரசியல் பேசி வந்த விஜய் , அவரது மன்றத்தினரை மெல்ல மெல்ல தேர்தல் களத்திலும் இறக்கி ஆழம் பார்த்து வந்தார். இப்போது முழுவதுமாக அரசியல் களத்தில் குதிக்க முடிவெடுத்து விட்ட அவர், முதற்கட்டமாக மக்கள் நலப் பணிகளை செய்யுமாறு மன்றத்தினரை முடுக்கிவிட்டு இருக்கிறார். அடுத்து அம்பேத்கர், தீரன் சின்னமலை உள்ளிட்டோருக்கு … Read more

பிரதமர் மோடி திறந்து வைத்த புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் அமைந்துள்ள சிறப்பு அம்சங்கள்..!

பிரதமர் மோடி நேற்று புதிய பாராளுமன்றத்தை திறந்து வைத்தார். இந்த புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் சிறப்பு அம்சங்கள் வருமாறு:- புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் மொத்த மதிப்பீடு ரூ. 1250 கோடி. 4 மாடிகளுடன் 65 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது. 23 லட்சத்து 4 ஆயிரத்து 95 மனித வேலை நாட்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இந்த கட்டிடத்தின் ஆயுள் காலம் 150 ஆண்டுகள் என கணக்கிடப்பட்டுள்ளது. கட்டிடக் கலையில் இந்தியாவின் அனைத்து மாநில அம்சங்களும் இடம் … Read more

மோடி அரசின் 9 முக்கிய சாதனைகளை பட்டியலிட்ட பாஜக மாநிலச் செயலாளர்..!!

பாஜக மாநிலச் செயலாளர் டால்பின் ஸ்ரீதரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “நரேந்திர மோடி அரசு பதவியேற்று ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்து, முக்கியமான ஆண்டாக பார்க்கப்படும் பத்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த நிலையில், பாஜக தனது பணிகளை முந்தைய காங்கிரஸ் கால ஆட்சியுடன் ஒப்பிட்டுப் பார்த்து தனது தனது தனிப்பெரும் சாதனைகளை புள்ளி விபரங்களுடன் கூறியுள்ளது. ஒன்பது ஆண்டுகள், ஒன்பது அதிசயங்கள் என்ற பெயரில் சேவா, சமர்பன், கரிப் கல்யாண்’ என்ற கோஷத்துடன் அரசின் ஒன்பது ஆண்டு … Read more

இது தேவையா ? ஷங்கரின் எந்திரன் படத்தில் வருவது போல் காப்பி அடித்த மாணவன் கைது..!!

புதுக்கோட்டை மாவட்டம் ஆளப்பிறந்தான் அடுத்த குளத்தூர் ஊகான்வயல் பகுதியைச் சேர்ந்தவர் துரைராஜ். இவரது மகன் தர்மர்(20). இவர் டிப்ளமோ சிவில் படிப்பை முடித்துவிட்டு ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் சிவில் பிரிவில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இவர் டிப்ளமோ சிவில் படித்ததை வைத்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த பொறியியல் துணை சேவைகள் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்துள்ளார். இந்நிலையில் தர்மருக்கு புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள … Read more

அதிர்ச்சி சம்பவம்..!! அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மத்திய உணவில் பாம்பு..!

பீகார் மாநிலம் அராரியா மாவட்டம் பார்பிஸ்கஞ்ச் பகுதியில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்குள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச மத்திய உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, பார்பிஸ்கஞ்ச் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் நேற்று முன்தினம் மத்திய உணவாக கிச்சடி வழங்கப்பட்டது. இந்த உணவை சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உட்கொண்ட நிலையில், அதில் ஒரு மாணவருக்கு பறிமாறிய சாப்பாட்டில் பாம்பு ஒன்று இறந்த நிலையில் இருந்துள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்போது … Read more