கட்டுமானப் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களை கௌரவித்த பிரதமர் மோடி..!!

இந்தியாவின் தற்போதைய நாடாளுமன்றக் கட்டிடம் 96 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அதனால், புதிய நாடாளுமன்றம் கட்ட ஒன்றிய அரசு முடிவு செய்தது. அதன்படி, கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி, புதிய நாடாளுமன்றம் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், சுமார் 970 கோடி ரூபாய் செலவில் அதிநவீன வசதிகளுடன் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். முன்னதாக நாடாளுமன்ற கட்டடத்திற்குள் வருகை தந்த பிரதமர் மோடியை … Read more

பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமி விவாகரத்து செய்கிறாரா ?

‘நட்புன்னா என்ன தெரியுமா?’, ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் ரவீந்தர். இவர் தயாரிப்பாளராக மட்டுமல்லாமல் பிக்பாஸ் விமர்சகராக பெரும்பாலானவர்களால் அடையாளம் காணப்பட்டவர். அதிலும் குறிப்பாக நடிகை வனிதா பங்கேற்ற பிக்பாஸ் சீசன்4 தான் இவரை டிரெண்டிங் ஆக்கியது என்றே சொல்ல வேண்டும். வனிதா- பீட்டர் பவுல் திருமண சர்ச்சையின் போது, நிர்கதியாக விடப்பட்ட பீட்டர் பவுலின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ரவீந்திரன் உறுதுணையாக இருந்து பல்வேறு உதவிகளை செய்தார் என்று கூறப்படுகிறது. தயாரிப்பாளர் மற்றும் … Read more

அக்னி நட்சத்திரத்திற்கு குட் பை: இன்றுடன் நிறைவடைவதால் மக்கள் நிம்மதி..!

சித்திரை மாதம் கடைசி வாரம் தொடங்கி, வைகாசி மாதம் முதல் வாரம் வரை உள்ள காலகட்டமே மிக அதிக வெப்பம் உள்ள காலமான அக்னிநட்சத்திரம் என்ற கத்திரி வெயில் எனப்படுகிறது. இந்த ஆண்டு சித்திரை மாதம் 21-ம் தேதி தொடங்கி, வைகாசி 14-ம் தேதி வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கிறது. இந்த ஆண்டு கடந்த 4-ம் தேதி கத்திரி வெயில் தொடங்கியது முதல் உள் மாவட்டங்கள் மட்டுமல்லாது கடலோர மாவட்டங்களிலும் கடும் வெயில் சுட்டெரித்தது. அக்னி நட்சத்திர … Read more

நாட்டின் சாம்பியன்களிடம் அடாவடியாக நடந்து கொண்ட பாஜக அரசு!!

நாட்டுக்காக பதக்கம் வாங்கிக் கொடுத்த வீரர், வீராங்கனைகளிடம் பாஜக அரசு கடுமையாக நடந்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் புகாருக்கு உள்ளான பிரிஜ் பூஷன் ஷரண் சிங் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எதுவும் எடுக்காததை அடுத்து மல்யுத்த வீரர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் போராட்டத்தை எப்படியாவது கலைத்துவிட வேண்டும் என ஒன்றிய அரசு சதித்திட்டம் தீட்டி வருகிறது. இதற்கிடையில் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது … Read more

சிறுவனை மாடியில் இருந்து தூக்கி வீசிய ஆசிரியர்!!

வீட்டுப் பாடத்தை முடிக்காததால் பள்ளி ஆசிரியர், 6 வயது சிறுவனை மாடியில் இருந்து தூக்கி வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் கிழக்கு சம்பரான் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் ஒருவர் மாணவர்களிடம் கடுமையாக நடந்து கொள்பவர் என்று கூறப்படுகிறது. இவர் 1-ம் வகுப்பு படிக்கும் சிறுவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கிறார். இந்த சூழலில் குழந்தைகள் வீட்டு பாடத்தை சரியாக முடிக்காமல் வந்துள்ளனர். மறுநாள் ஆசிரியர் வீட்டு பாடம் குறித்த கேள்வி … Read more

ஓய்வை அறிவித்தார் பிரபல சிஎஸ்கே வீரர்!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான அம்பத்தி ராயுடு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து முடிந்து தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், நடப்பு சாம்பியனான குஜராத் டைடன்ஸ் அணியும் கோப்பையை வெல்ல பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்நிலையில் சென்னை அணியில் விளையாடி வரும் அம்பத்தி ராயுடு இறுதிப்போட்டியுடன் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். இவர் சென்னை அணிக்கு பல … Read more

பள்ளி நண்பன் இறந்ததால் அதே தீயில் விழுந்து உயிரைவிட்ட சக நண்பன்!!

உயிர் நண்பன் இறந்ததால் அந்த இழப்பை தாங்க முடியாமல், அவரை எரித்த அதே தீயில் குதித்து சக நண்பன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பிரோசாபாத் அடுத்த நாக்லா கங்கர் பகுதியில் அசோக் (42) என்ற நபர் வசித்து வருகிறார். இவரும் காதியா பஞ்சவடி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் (40) என்பவரும் பல ஆண்டுகளாக நண்பர்கள். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு அசோக்கிற்கு உடல்நல கோளாறு ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில் அவருக்கு … Read more

வெளிநாட்டு பெண்ணை இந்தியா வரவழைத்து பாலியல் வன்கொடுமை!!

பெலாரஸ் நாட்டை சேர்ந்த பெண்ணை குஜராத் வரவழைத்து இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த மின்க் (19) என்ற இளம்பெண்ணுக்கு ஆன்லைன் விளையாட்டு மூலம் அகமதாபாத்தை சேர்ந்த மெஹேரியா என்பவரின் அறிமுகம் கிடைத்தது. முதலில் நட்பாக பழகிய இவர்கள் பின்னர் காதலிக்க தொடங்கியுள்ளனர். அந்தப் பெண் தனது காதலரை சந்திக்க பெற்றோரிடம் ரஷ்யா செல்வதாக கூறி இந்தியா வந்து மெஹேரியாயை சந்தித்துள்ளார். அகமதாபாத்தில் இருவரும் ஒரு அடுக்குமாடி … Read more

பரபரப்பு! இந்தியாவில் நிலநடுக்கம்!!

அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவின் காஷ்மீரிலும் உணரப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் எல்லை பகுதியில், இன்று காலை 10.50 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.0 அளவில், 223 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் பல்வேறு மாவட்டங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதுதவிர, இஸ்லாமாபாத், ராவல்பிண்டி ஆகிய நகரங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்க புவியியல் ஆய்வு … Read more

அதிர்ச்சி! 6 வயது சிறுமியை வன்கொடுமை செய்த கடைக்காரர்!!

வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் கடைக்காரர் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டம் சாஸ் என்ற இடத்தில் அசோக் ஜன்ஜாரியா (37) என்ற நபர் சிறிய கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், பக்கத்து வீட்டு பெண் ஒருவரும் கடை நடத்தி வருகிறார். அந்த பெண்ணுக்கு 6 வயதில் மகள் இருக்கிறார். இதனால் அசோக், அந்த சிறுமியுடன் விளையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். சிறுமியின் குடும்பத்தோடும் அசோக்கிற்கு … Read more