உலகின் பிரபலமான அன்னாசிப் பழத்தை இலங்கையில் பயிரிட அனுமதி கோரல்

உலகில் மிகவும் பிரபலமான அன்னாசிப் பழ வகைகளில் ஒன்றான எம்டி2 அல்லது சுபர் ஸ்வீட் பைன் அபல் (அனாநஸ் கொமோஸஸ்) இன அன்னாசியை இலங்கையில் பயிரிடுவதற்கு உடனடியாகப் பரிந்துரைக்குமாறு விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாயத் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். எம்டி2 அன்னாசி வகைக்கு உலக சந்தையில் அதிக கேள்வி காணப்பட்டாலும் அவ்வன்னாசி வகையை இலங்ககையில் பயிரிட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவ்வன்னாசி இனம் இனிப்புச் சுவையுடன் அமிலத் தன்மை குறைந்ததாகக் காணப்படுகின்றது. அத்துடன் … Read more

வடக்கில் காணி உறுதிப் பத்திரங்களை கைமாற்றும் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தம் – வட மாகாண ஆளுநர்

வடக்கு மாகாணத்தில் காணி உறுதிப் பத்திரங்களை கைமாற்றும் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் தெரிவித்தார். யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்றைய தினம் (18) யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்த வருட இறுதிக்குள் மீள் குடியேற்ற நடவடிக்கை நிறைவு செய்யப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி வழங்கியுள்ள பணிப்புரைக்கு அமைய, மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஆளுநர் தெரிவித்தார். … Read more

இலங்கை அஞ்சல் திணைக்களம் குறுஞ் செய்தி சேவைகளைப் (SMS) பயன்படுத்துவதில்லை – தபால் மா அதிபரின் விசேட அறிவித்தல்

உள்நாட்டு அல்லது வெளிநாட்டுப் பொதிகள் கிடைக்கப் பெற்றதை அறிவிப்பதற்கு இலங்கை அஞ்சல் சேவை எவ்விதக் குறுஞ் செய்தி (SMS) களையும் பரிமாறுவதில்லை என்றும் போலி இணையத்தளங்களின் ஊடாக அநாமதய கையடக்கத் தொலைபேசி இலக்கங்களைப் பயன்படுத்தி பொது மக்களை ஏமாற்றும் செயல்களில் ஈடுபடுவதில்லை என்றும் தபால் மா அதிபர் ருவன் சத்குமார விடுத்துள்ள அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளார். இதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை அஞ்சல், இலங்கை அஞ்சல் திணைக்களம், SL POST, Sri Lanka Post போன்ற பெயர்களைத் தாங்கி இப்போலி … Read more

பாடசாலை போசாக்குத் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தால் வழங்கப்பட்ட உணவுப் பொருட்களை பாடசாலைகளுக்கு வழங்கும் பணி ஆரம்பம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் … Read more

மியான்மாரில் இணைய மோசடி கடத்தலில் இருந்து மீட்கப்பட்ட இலங்கையர்கள் பத்திரமாக இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

மியன்மார் மற்றும் தாய்லாந்திலுள்ள இலங்கை தூதரகங்களின் ஒருங்கிணைப்புடன் மியன்மார் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சானது, மியான்மாரில் இணைய மோசடி கூட்டுகளில் கட்டாய குற்றச் செயல்களுக்காக கடத்தப்பட்ட எட்டு இலங்கையர்களை வெற்றிகரமாக மீட்டு, திருப்பி அனுப்பியது. இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கமைய , மியான்மார் சட்ட அமுலாக்க அதிகாரிகள் கடத்தப்பட்ட இலங்கையர்களை 2024, ஏப்ரல் 4 அன்று மீட்டனர். பாங்காக்கில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி தாய்லாந்தில் உள்ள மேஸோ எல்லை … Read more

“வசத் சிரிய – 2024” புத்தாண்டு அழகன்-அழகி விண்ணப்பம் ஏற்கும் காலம் நீடிப்பு

ஸ்டேன்டட் சைக்கிள் ஓட்டப் போட்டிக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 25 நண்பகல் 12.00 வரை ஏற்கப்படும். மரதன் ஓட்டப் போட்டி விண்ணப்பம் ஏப்ர ல் 26 காலை 10.00 வரை ஏற்பு. சகல வெற்றியாளர்களுக்கும் பெறுமதியான பரிசில். சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க பல நிகழ்ச்சிகளுடன் ‘வசத் சிரிய 2024’ ஏற்பாடு. ஜனாதிபதி செயலக நலன்புரிச் சங்கம் மற்றும் அமைச்சுக்கள் இணைந்து எதிர்வரும் ஏப்ரல் 27 ஆம் திகதி சனிக்கிழமை காலி முகத்திடலில் சங்கரில்லா பசுமை மைதானத்தில் ஏற்பாடு செய்துள்ள “வசத் … Read more

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும்

அரசாங்கத்தின் திட்டத்துடன் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம்- நுவரெலியா இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இளம் அரசியல் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு. இந்நாட்டின் இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கையை உருவாக்க முடியும் என்ற உறுதியான நம்பிக்கை தனக்கு இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். வீழ்ச்சியடைந்த இலங்கைப் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவது கடினமானது எனப் பலரும் கூறியபோதும் அந்த சவாலை ஏற்றுக்கொண்டு, இரண்டு வருடங்களுக்குள் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரமான நிலைக்குக் கொண்டு வந்ததாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, … Read more

கிளிநொச்சியில் யாழ் சமூக செயற்பாட்டு மைய நிறுவனத்தின் செயற்றிட்டம் தொடர்பான கலந்துரையாடல்

யாழ் சமூக செயற்பாட்டு மையம்(JSAC) நிறுவனத்தினால் கிளிநொச்சி மாவட்டத்தில் புதிதாக முன்னெடுக்கப்படவுள்ள செயற்றிட்டம் தொடர்பான ஆரம்பகட்ட கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் தலைமையில் நேற்று (18) நடைபெற்றது. மாற்று வலு உடையவர்களின் கல்வி ஊக்குவிப்பை மையப்படுத்தியதாக இக் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. மூன்று வருட காலப்பகுதியை உள்ளடக்கிய இத் திட்டத்திற்கு 83 மில்லியன் செலவிடப்படவுள்ளது. இதன்போது யாழ் சமூக செயற்பாட்டு மையத்தின் (JSAC) திட்ட முகாமையாளர் குறித்த திட்டம் தொடர்பாக திட்டத்துடன் சம்பந்தப்பட்ட … Read more

பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.2024 ஏப்ரல் 18ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2024 ஏப்ரல் 18ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடமத்திய, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் சில இடங்களில் … Read more

கடற்பரப்புகளில் காற்றானது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடும்..

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2024 ஏப்ரல் 18 ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: கொழும்பிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. … Read more