‘உறுமய’ வேலைத்திட்டம் அரசியல் வேலைத்திட்டம் அல்ல – சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதான பத்திரன

இரண்டு வருடங்களில் இந்த நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட புரட்சிகரமான வேலைத்திட்டம் ‘உறுமய’ வேலைத்திட்டம் ஆகும் – காணி ஆணையாளர் நாயகம். வடக்கு/கிழக்கில் 70% காணி உரிமை தீர்வும், ஏனைய மாகாணங்களில் 99% தீர்வும் வழங்கப்பட்டுள்ளது – காணி நிர்ணயத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம். அனைத்து காணிகளும் அடையாளம் காணப்பட்டு டிஜிட்டல் தரவு கட்டமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ளன – காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் தலைவர். பிரதேச செயலக மட்டத்தில் காணி உபயோகத் திட்டங்கள் தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன – காணி உபயோகக் … Read more

2024 ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது…

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் வர்த்தமானி அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா சுகாதார சேவைகளை விஸ்திகரிக்கும் நோக்குடன் புரிந்துணர்வு உடன்படிக்கை

சுற்றுலாப் பயணிகளுக்காக 04 வைத்தியசாலைகளில் வசதியாக பணம் செலுத்தும் நோயாளர் அறைகளை நிறுவ 80 மில்லியன் ரூபா.. இலங்கையின் சுற்றுலாத் துறையை வலுப்படுத்தி சுகாதாரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் சுற்றுலா அமைச்சு, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) மற்றும் சுகாதார அமைச்சு ஆகியன இணைந்து (22) கொழும்பு ‘கோல்பேஸ்’ ஹோட்டலில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தம் ஒன்றை கைச்சாத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன மற்றும் சுற்றுலா மற்றும் … Read more

சதொச ஊடாக பொதுமக்களுக்கு மேலும் நிவாரணம்…

பொதுமக்களுக்கு சலுகைகளை வழங்கும் நோக்கில் இலங்கை சதொச நிறுவனம் அத்தியாவசிய பொருட்களின் பலவற்றின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய, 400 கிராம் சதொச பால்மா பக்கெட் ஒன்றின் விலை 910 ரூபாவாகவும்,ஒரு கிலோ கிராம் பாசிப்பயறு 965 ரூபாவாகவும்;, நெத்தோலி ஒரு கிலோ கிராம் 950 ரூபாவாகவும், இந்திய பெரிய வெங்காயம் ஒரு கிலோ கிராம் 285 ரூபாவாகவும்;, கடலை ஒரு கிலோ கிராம் 444 ரூபாவாகவும், கோதுமை மா ஒரு கிலோ கிராம் 185 … Read more

மக்கள் நாட்டைக் கட்டியெழுப்பும் திட்டத்துடன் ஒன்றிணைந்துள்ளனர்

இரண்டு வருடங்களுக்கு முன்னர் தாம் கூறிய தீர்வுக்கு முழு நாடும் கைகோர்த்து வருவதாக நேற்று (24) காலி சமனல விளையாட்டரங்கில் நடைபெற்ற ‘ஜயகமு ஸ்ரீலங்கா’ நடமாடும் மக்கள் சேவையில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். எனக்கு ஒரு கொள்கை இருக்கிறது, தீர்வு இல்லை என்று நான் இரண்டு வருடங்களுக்கு முன்பு கூறினேன். இன்று அந்தத் தீர்வுக்காக இன, மத நிற மற்றும் கட்சி வேறுபாடின்றி மக்கள் ஒன்றுபடத் தொடங்கியுள்ளனர். நாட்டை கட்டியெழுப்ப … Read more

ஜனாதிபதி தேர்தல் 2024

1981 ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல் சட்டத்தின் சட்ட ஏற்பாடுகளுக்கமைய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான பிரகடனத்தை வெளியிடும் திகதியும், பெயர் குறித்த நியமனங்களை ஏற்கும் திகதியும் பற்றி அறிவிக்கும் அதிவிசேட வர்த்தமாணி அறிவித்தலை நாளை (ஜூலை மாhதம் 26ஆம் திகதி) வெளியிடுவதற்கு இன்று (25) தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்தள்ளது. அதேபோல் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் திகதியும், ஏனைய நியதிச்சட்ட ஏற்பாடுகளும் பற்றி பல்வேறு தரப்பினர்கள் மற்றும் கட்சிகளால் முன் வைக்கப்படும் கருத்துக்களுக்கு தேர்தல் ஆணைக்குழு பொறுப்புடையதல்ல … Read more

RAMIS முறையை திறம்பட பயன்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

வருவாய் நிர்வாக முகாமைத்துவ தகவல் முறைமையை (RAMIS) எவ்வாறு திறம்பட பயன்படுத்துவது என்பது குறித்து ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ‘வருவாய் நிர்வாக முகாமைத்துவ தகவல் முறைமை (RAMIS)-பராமரிப்பு சேவைகளைப் பெறுதல்’ என்ற 24/0696/604/079 ஆம் இலக்க அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைய 2024 ஆம் ஆண்டு … Read more

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற புதுருவகல மகா வித்தியாலயத்தின் மாணவர் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு சிறப்பித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

மொனராகலை, புதுருவகல மகா வித்தியாலயத்தின் மாணவர் பாராளுமன்றம் அண்மையில் (17) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக, பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர, பாராளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன, உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும், தொடர்பாடல் பதில் பணிப்பாளருமான எம்.ஜயலத் பெரேரா, ஜனாதிபதி செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் மேஜர் நதீக தங்கொல்ல உள்ளிட்ட பலர் … Read more

அரச ஊழியர்களுக்கான விசேட விடுமுறை

கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளம், மண் சரிவு மற்றும் வீதித் தடைகள் காரணமாக பணிக்கு சமூகமளிக்க முடியாத அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கொழும்பு, களுத்துறை, கம்பஹா, காலி மாத்தறை, ஹம்பாந்தோட்டை, புத்தளம், குருநாகல், பொலொண்ணறுவை, கேகாலை மற்றும் இரத்திணபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அரச ஊழியர்களுக்கே இந்த விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது. அந்த மாவட்டங்களில் வெள்ளம், மண் சரிவு மற்றும் வீதித் தடைகள் காரணமாக … Read more

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் வவுனியா பிராந்திய அலுவலகம் இடமாற்றம்

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் இல: JC 23, வெளிச்சுற்று வீதி, வவுனியா எனும் முகவரியில் அமைந்துள்ள பிராந்திய அலுவலகம், 2024 ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி முதல் காமினி வித்தியாலத்திற்கு முன்னால் மன்னார் வீதி, வவுனியா எனும் முகவரியில் அமைந்துள்ள கட்டிடத்தில் நிறுவப்படவுள்ளது என்று இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இலக்கம் JC 23, வெளிச்சுற்று வீதி, வவுனியா எனும் முகவரியில் அமைந்துள்ள தற்போது பொதுமக்கள் சேவைகளை வழங்கிவரும் பிராந்திய … Read more