இந்திய எல்லையில் பாலம் கட்டும் சீனா.. மத்திய அரசு பரபரப்புத் தகவல்!

இந்தியா – சீனா இடையே 2020ஆம் ஆண்டு மே மாதம் முதல் எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. இருதரப்பு அதிகாரிகளும் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியபிறகும் எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காமல் நீண்டுகொண்டே போகிறது.

இதற்கிடையே, எல்லைப் பகுதியில் இந்தியாவுக்கு சொந்தமான இடத்தில் சீனா ஒரு பாலம் கட்டி வருவதாக சில தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள இடத்தில் பாலம் கட்டி வருவதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “1962ஆம் ஆண்டு முதல் சீனா சட்டவிரோதமாக அக்கிரமித்துள்ள பகுதியில் பாலம் கட்டப்பட்டு வருகிறது. ஜம்மூ காஷ்மீரும், லடாக்கும் இந்தியாவின் பகுதிகள் என அரசு தெளிவுபடுத்தியுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

இதேபோல, அருணாசலப் பிரதேசத்தில் சீனா எல்லைக்கு அருகே உள்ள பகுதிகளில் சில கிராமங்களின் பெயரை சீனா மாற்றிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. அதேபோல, லடாக்கில் உள்ள எல்லைப் பகுதியில்
பேங்காங் ஏரி
அருகே
சீனா பாலம்
கட்டி வருவதாகவும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.