சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் கௌரவிப்பு…

74ஆவது சுதந்திர தினத்தையொட்டி, தேசத்தின் சுதந்திரத்துக்காகப் போராடிய தேசியத் தலைவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

தேசத்தந்தை டீ.எஸ்.சேனாநாயக்க, எஸ்.டபிள்யூ.ஆர்.டீ.பண்டாரநாயக்க, சேர் ஜோன் கொத்தலாவல உள்ளிட்ட, தேசத்தின் சுதந்திரத்துக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட பத்து தலைவர்களின் உருவச் சிலைகளுக்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களது தலைமையில், ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் இன்று (04) முற்பகல் இடம்பெற்றது.

ஜனாதிபதி அலுவலகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு ஆகியன இணைந்து இந்த ஏற்பாட்டைச் செய்திருந்தன.

ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் சிசிர ஹேனாதீர, உள்நாட்டலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஷேத்திய வீரசூரிய ஆகியோர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
04-02-2022

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.