மும்பையில் 3 சதவீத விவாகரத்துக்கு போக்குவரத்து நெரிசலே காரணம்-தேவேந்திர பட்னாவிஸின் மனைவி குற்றச்சாட்டு <!– மும்பையில் 3 சதவீத விவாகரத்துக்கு போக்குவரத்து நெரிசலே கா… –>

மும்பையில் நடக்கும் 3 சதவீத விவாகரத்துக்கு மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிப்பதே காரணம் என முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸின் (Devendra Fadnavis) மனைவி குற்றம்சாட்டியுள்ளார்.

குண்டும் குழியுமான சாலைகளில் பயணிப்பதால் பெரும் அவதிக்கு ஆளாவதாகத் தெரிவித்த அம்ருதா ஃபட்னாவில் (Amruta Fadnavis), போக்குவரத்து நெரிசலில் சிக்கி குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடியாததே 3 சதவீத விவாகரத்துக்கு காரணம் என்றார்.

இதற்கு ட்விட்டரில் பதிலடி கொடுத்த சிவ சேனா துணைத் தலைவர் பிரியங்கா சதுர்வேதி ((Priyanka Chaturvedi), போக்குவரத்து நெரிசல் மிக்க பெங்களூருவில் வசிப்பவர்கள் இதனை நம்பினால் அவர்கள் குடும்ப வாழ்க்கைக்கு பேராபத்தாக அமையும் என நகைச்சுவையுடன் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.