கொரோனா விதிகளை கடைபிடித்து நேரடி விசாரணை நடத்த வேண்டும்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம்

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா 3ம் அலை அதிகரிக்க தொடங்கியபோது, தலைநகர் டெல்லியிலும் தினசரி பாதிப்புகள் அதிகளவில் பதிவானது. இதனால், கடந்த ஜனவரி 3ம் தேதி முதல் உச்ச நீதிமன்றத்தில் நேரடி விசாரணைகள் நிறுத்தப்பட்டு, காணொலி மூலமாக விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்குள் நாள் குறைந்து வருகிறது. இதனால், உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளை நேரடியாக விசாரிக்க வேண்டும் என, தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.அதில், ‘டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் வரும் 7ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. மேலும், உடற்பயிற்சி கூடங்கள், தனியார் அலுவலகங்கள் 100 சதவீத நபர்கள், பணியாளர்களுடன் செயல்படும் என டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில், கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து உச்ச நீதிமன்றத்திலும் அனைத்து வழக்குகளையும் மீண்டும் நேரடியாக விசாரணை வேண்டும்,’ என கோரப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.