சென்னை புத்தக கண்காட்சிக்கு இன்று முதல் ஆன்லைனில் முன்பதிவு.!

சென்னையில் புத்தகக் கண்காட்சிக்கு இன்று முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஜனவரியில் நடைபெறவிருந்த புத்தகக் கண்காட்சி கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதன் காரணமாக புத்தகக் கண்காட்சி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. அதன் காரணமாக பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது தமிழக அரசு.

இந்த நிலையில் சென்னையில் புத்தகக் கண்காட்சியை நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி பிப்ரவரி 16ஆம் தேதி முதல் மார்ச் 6-ஆம் தேதி வரை நாற்பத்தி ஐந்தாவது புத்தகக் கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் பங்கேற்க அஅனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கூட்ட நெரிசலை தவிர்க்க bapasi.com என்ற இணையதளம் மூலம் பணம் செலுத்தி இன்று முதல் ஆன்லைன் மூலம் நுழைவுச்சீட்டு பெற்று கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.