முதல் ஒரு நாள் போட்டி: விண்டீஸ் பேட்டிங்| Dinamalar

ஆமதாபாத்: ஆமதாபாத்தில் இன்று நடக்கும் முதல் சவாலில் இந்தியா, விண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளார்.

இந்தியா, விண்டீஸ் அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கின்றன. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இன்று 1,000-வது போட்டியில் விளையாடுகிறது இந்திய அணி. முதல் போட்டி இன்று ஆமதாபாத் மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடக்கிறது. இதில் இந்திய அணி கேப்டனாக களமிறங்குகியுள்ளார் ரோகித் சர்மா.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ரோகித் சர்மா முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளார். இதனையடுத்து விண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

இந்திய அணி விவரம்

ரோகித்சர்மா, இஷாந்த் கிஷன், விராத் கோஹ்லி, ரிஷப் பன்ட், எஸ் யாதவ், தீபக் ஹூடா, ஷர்துல் தாக்கூர், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், சஹால், கிருஷ்ணா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.