விண்டீசை வீழ்த்தியது இந்தியா: ரோகித், சகால் அசத்தல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ஆமதாபாத்: விண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் யுவேந்திர சகால், வாஷிங்டன் சுந்தர், கேப்டன் ரோகித் சர்மா கைகொடுக்க இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

latest tamil news

இந்தியா வந்துள்ள விண்டீஸ் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப் பெரிய மோடி மைதானத்தில் முதல் போட்டி நடந்தது. இது, இந்திய அணி பங்கேற்ற 1000வது ஒருநாள் போட்டி. இந்திய அணியில் ‘ஆல்-ரவுண்டர்’ தீபக் ஹூடா அறிமுகமானார். ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

latest tamil news

விண்டீஸ் அணிக்கு ஜேசன் ஹோல்டர் (57) அரைசதம் கடந்து ஆறுதல் தந்தார். கேப்டன் போலார்டு (0), நிக்கோலஸ் பூரன் (18) உள்ளிட்ட மற்றவர்கள் ஏமாற்ற விண்டீஸ் அணி 43.5 ஓவரில் 176 ரன்னுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. இந்தியா சார்பில் யுவேந்திர சகால் 4, வாஷிங்டன் சுந்தர் 3, பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட் கைப்பற்றினர்.
சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா (60), சூர்யகுமார் யாதவ் (34), தீபக் ஹூடா (26) கைகொடுக்க, 28 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 178 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணி 1-0 என, முன்னிலை பெற்றது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.