அண்ணாமலையாரை தரிசித்த அருண் விஜய்: இப்படி வேண்ட பெரிய மனசு வேணும்

படத்திற்குப் படம் தனது தனித்துவமான நடிப்பாலும் தன்னார்வ தொண்டு செயல்களினாலும் பல ரசிகர்களின் அன்பைப் பெற்றவர் நடிகர்
அருண் விஜய்
.

தனது நடிப்பில் உருவான ‘சினம்’, ‘அக்னிசிறகுகள்’, ‘அருண்விஜய்யின் ‘பார்டர்’, ‘
யானை
’, ‘ஓ மை டாக்’ படங்கள் திரைக்கு வரத் தயாராகி வருவதைத் தொடர்ந்து நேற்று (6/02/2022) திருவண்ணாமலை கோயிலில் அண்ணாமலையாரை தரிசித்தார்.

இறைவனின் அருளோடு அனைத்து படங்களும் வெற்றி பெற்று தமிழ் திரையுலகம் மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்ப வேண்டும் என வேண்டிக் கொண்டதாகப் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.

நேற்று முன் தினம் இரவு (05/02/2022) ரசிகர்களுடன் இணைந்து நடிகர் அருண் விஜய் கிரிவலம் மேற்கொண்டார்.

தன் சகோதரி ப்ரீத்தாவின் கணவரான ஹரி இயக்கத்தில் அருண் விஜய், ப்ரியா பவானி சங்கர் சேர்ந்து நடித்திருக்கும் யானை படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.

சிங்கம் போன்று யானையும் பெரிய அளவில் ரீச்சாகுமா என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள். அனைத்து படங்களும் வெற்றி பெற வேண்டும் என்று அருண் விஜய் வேண்டியது குறித்து அறிந்தவர்களோ, இப்படி வேண்ட தனி மனசு வேண்டும் என்கிறார்கள்.

ஐஸ்வர்யா விஷயத்தில் மீண்டும் வதந்தியை உண்மையாக்குவாரா தனுஷ்?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.