பெட்ரோல் நிரப்பி விட்டு பணம் கொடுக்காமல் தப்பிசென்ற சென்ற இரு இளைஞர்கள் <!– பெட்ரோல் நிரப்பி விட்டு பணம் கொடுக்காமல் தப்பிசென்ற சென்ற… –>

கோயம்புத்தூர் மாவட்டத்தில் பெட்ரோல் பங்கில், பெட்ரோல் நிரப்பி விட்டு பணம் கொடுக்காமல் இரண்டு இளைஞர்கள் தப்பிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. 

கே.என்.ஜி புதூர் பகுதியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் ஒன்றிற்கு நேற்றிரவு duke பைக்கில் பெட்ரோல் போட வந்த இரண்டு இளைஞர்கள் 800 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுவிட்டு பணம் பரிவர்த்தனைக்காக ஒரு கார்டு வழங்கியுள்ளனர்.

அதில் பணம் இல்லாததால் இரண்டு 500 ரூபாய் நோட்டுகளை வழங்கிய இளைஞர்கள், அதன் பின் சில்லறை தருவதாக கூறி ஆயிரம் ரூபாயை வாங்கிக்கொண்டு பணம் ஏதும் தராமல், கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிசென்றுவிட்டனர்.

அவர்களை துரத்தி சென்ற பெட்ரோல் பங்க் ஊழியர் கீழே விழுந்த நிலையில் இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ஊழியர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.