65 மில்லியன் ரூபா செலவில் பட்டிப்பளை பிரதேசத்திற்கு குடிநீர் வேலைத்திட்டம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கை பிரகடனத்துக்கு அமைவாக ‘அனைவருக்கும் சுத்தமான குடிநீர்’ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட இரண்டு பகுதிகளுக்கு குடிநீர் விநியோகத்திற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தின், பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட, முதலைக்குடா மற்றும் அம்பிளாந்துறை ஆகிய பகுதிகளுக்கான குடி நீர் வழங்கும் திட்டத்தினை ,பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் நேற்று (07) ஆரம்பித்தார்.

பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட இவ்விரு கிராமங்களிலும் இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட இந்த அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக சுமார் 750 குடும்பங்கள் பயனடையவுள்ளனர்.

இதற்காக சுமார் 65 மில்லியன் ரூபா நிதி இராஜாங்க அமைச்சரின் சிபாரிசின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.