சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவனை மின்சாரக் கம்பத்தில் கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள் <!– சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவனை மின்சாரக் கம்பத்த… –>

தேனி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவனை மின்சார கம்பத்தில் கட்டி வைத்து மக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

பெரியகுளம் அடுத்த வடுகப்பட்டியில் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமிகளுக்கு ஒருவன் பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.இதனையறிந்த அப்பகுதி மக்கள் அவனை கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். தகவலறிந்து வந்த போலீசார் மக்களிடமிருந்து அவனை மீட்டனர்.

விசாரணையில் அவன் அல்லிநகரம் பகுதியை சேர்ந்த பாண்டி என்பது தெரியவந்தது. பொது மக்கள் தாக்கியதில் அவனுக்கு காயம் ஏற்பட்டதால் சிகிச்சைக்குப் பிறகு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.