புலம்பெயர் இலங்கை தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!



வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களின் சேவைக்காலம் மற்றும் பணம் அனுப்பும் தொகையின் அடிப்படையில் வரிச் சலுகையில் வாகனத்தை இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் இந்த கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கு பதிலளித்த தொழிலாளர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இது தொடர்பில் தேவையான நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

இதேவேள, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை அனுப்பும் ஒரு டொலர் ஒன்றிற்கு 240 ரூபாவை வழங்க முன்மொழிந்துள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி….

புலம்பெயர் நாட்டில் இருந்து அனுப்பும் ஒவ்வொரு டொலருக்கும் 240 ரூபாய்



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.