மகன்கள் சரியாக பார்த்து கொள்ளாததால், தம்பதி தீக்குளித்து தற்கொலை <!– மகன்கள் சரியாக பார்த்து கொள்ளாததால், தம்பதி தீக்குளித்து … –>

ன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கூலித் தொழிலாளி ஒருவர் உடல்நலம் குன்றி படுத்த படுக்கையாக இருந்ததாலும் , தனது மகன்களிடம் இருந்து போதிய உதவி கிடைக்காத விரக்தியிலும் மனைவியுடன் தீக்குளித்து தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சியோன்புரத்தைச் சேர்ந்த செல்வ ஜெயசிங் – தங்கம் தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஒருவர் திருமணமாகி தனியே வசித்து வரும் நிலையில், ஒரு மகன் இவர்களுடன் வசித்து வருகிறார்.

கட்டுமான தொழிலாளியாக பணியாற்றி வந்த செல்வ ஜெயசிங்கிற்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு படுத்த படுக்கையாகியுள்ளார்.

இவரது சிகிச்சைக்கு அதிக செலவானதாகவும் மகன்களிடமிருந்து போதிய உதவி கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

அதோடு, இளைய மகன் அடிக்கடி குடித்துவிட்டு  பிரச்சனை செய்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இரு மகன்களும் கைவிட்டதால், மனமுடைந்த பெற்றோர் நேற்றிரவு  தீக்குளித்து தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.