வங்கிகள் தனியார் மயமா? மத்திய அமைச்சர் பதில்!| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி : ”வங்கிகளை தனியார் மயமாக்குவது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை,” என, மத்திய அமைச்சர் பகவத் கராத் தெரிவித்தார்.

latest tamil news

பார்லிமென்டில் நேற்று இவர் கூறியதாவது: முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மைத் துறையில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் சில விஷயங்களை கூற விரும்புகிறேன். வங்கிகளை தனியார் மயமாக்குவது தொடர்பாக இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

latest tamil news

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட சட்டங்களில் திருத்தம் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. இந்த விஷயம் தொடர்பாக வங்கி யூனியன்களிடமிருந்தும் பல்வேறு கருத்துக்கள் வந்துள்ளன. இது குறித்தும் பரிசீலிக்கப்படும். இவ்வாறு கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.