விவாகரத்திற்கு பின் இரண்டாவது திருமணம் செய்துகொள்ளும் முன்னணி நடிகர்..!பெண் யார் தெரியுமா?

ஹிந்தி சினிமா உலகில் பிரபல முன்னணி நடிகராக இருந்து வருபவர் பர்கான் அக்தர். 2008 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற
ராக்
திரைப்படம் மூலம் நாயகனாக அறிமுகமானார் பர்கான் அக்தர். அதைத்தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான
பாக் மில்கா பாக்
திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்தது.

கடைசியாக இவர் நடிப்பில் டூபான் என்ற படம் வெளியானது. இந்நிலையில் கடந்த 2000 ஆம் ஆண்டு பர்கான் அக்தருக்கு அதுனா என்பவருடன் திருமணம் ஆனது. இருப்பினும் சமீபத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழப்போவதாக அறிவித்தனர்.

தனுஷிடம் புதுவிதமாக காதலை வெளிப்படுத்திய ஐஸ்வர்யா..இது ரொம்ப புதுசுப்பா..!

இந்நிலையில் பர்கான் அக்தர் பிரபல ஹிந்தி நடிகையும், பாடகியுமான
ஷிபானி
என்பவருடன் காதலில் இருந்து வந்ததாக செய்திகள் வந்தன. ஆனால் இந்த செய்தியை அப்போது அவர்கள் உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும் பொது இடங்களில் ஒன்றாக செல்வது, படப்பிடிப்பின் போது நெருக்கம் காட்டுவது என இவர்களது காதல் இவர்கள் சொல்லாமலும் அனைவர்க்கும் தெரிந்தது.

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் காதலித்த இவர்கள் தற்போது திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 50 வயதை நெருங்கும் பர்கான் அக்தர் 40 வயதான ஷிபானியை இரண்டாவது திருமணம் செய்யவுள்ளார். இவர்களது திருமணம் பிப்ரவரி 21 ஆம் தேதி நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சூழ எளிமையான முறையில் நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

பெரிய ஹீரோ , சின்ன ஹீரோ என்றெல்லாம் இல்லை , நல்ல படங்கள் பண்ணுவேன் – நடிகை திவ்யபாரதி!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.