Dhanush:மகன் விவாகரத்து: தனுஷ் அப்பாவுக்கு குவியும் பாராட்டு

தனுஷும், ஐஸ்வர்யாவும் தங்கள் பிரிவை அறிவித்துவிட்டார்கள். ஆனால் இது விவாகரத்து எல்லாம் இல்லை, எல்லா குடும்பத்திலும் நடக்கும் தகராறு தான் என தனுஷின் அப்பா
கஸ்தூரி ராஜா
தெரிவித்தார்.

மேலும் தன் மகனையும், மருமகளையும் சேர்த்து வைக்க தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார். தனுஷுடன் மீண்டும் சேர்ந்துவிடலாம் என்று முடிவு செய்த பிறகு கஸ்தூரி ராஜாவை தான் முதலில் தொடர்பு கொண்டு பேசினாராம்
ஐஸ்வர்யா
.

இருவரும் சேர்ந்து ஒரு பிளான் போட்டிருக்கிறார்கள். அதை தனுஷிடம் கஸ்தூரி ராஜா சொல்லியிருக்கிறார். பிளானை கேட்ட
தனுஷ்
கடுப்பாகி, யாரை கேட்டு இந்த ஏற்பாடு செய்தீர்கள் என்று கத்தினாராம்.

பின்னர் தன் மனைவியுடன் சேர்ந்து தனுஷிடம் பேசியிருக்கிறார் கஸ்தூரி ராஜா. அப்பொழுது தான், ஐஸ்வர்யா பற்றியும், அவருடன் 18 ஆண்டுகள் வாழ்ந்தது பற்றியும் 30 நிமிடம் பேசினாராம் தனுஷ்.

ஐஸ்வர்யா என்னலாம் செஞ்சார்னு தெரியுமா?: தனுஷ் சொன்னதை கேட்டு அழுத பெற்றோர்
நான் சொன்னது வெறும் 10 சதவீதம் கூட இல்லை, முழுவதையும் கேட்டால் நீங்கள் இருவரும் தாங்க மாட்டீர்கள் என்றாராம். தனுஷ் சொன்னதை கேட்டு அவரின் அப்பாவும், அம்மாவும் அழுதுவிட்டார்களாம்.

பிள்ளைகள் யாத்ரா, லிங்காவுக்காகவாவது உன் முடிவை மாற்றிக் கொள் என்றாராம் கஸ்தூரி ராஜா. அவர் இப்படி தொடர்ந்து முயற்சி செய்வதை பார்த்து தான் ரசிகர்கள் பாராட்டுகிறார்கள்.

கஸ்தூரி ராஜா ஒரு பக்கம், ரஜினி மறுபக்கம் என்று முயற்சி செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.