கார் மோதி மாற்றுத்திறனாளி முதியவர் உயிரிழப்பு ; கார் ஓட்டுனரை அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்த உறவினர்கள் <!– கார் மோதி மாற்றுத்திறனாளி முதியவர் உயிரிழப்பு ; கார் ஓட்ட… –>

கோயம்புத்தூரில் 4 சக்கர தள்ளுவண்டியில் சாலையில் சென்ற மாற்றுத்திறனாளி முதியவர் மீது கார் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அங்கு திரண்ட அவரது உறவினர்கள், விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுனரை அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.

கண்ணப்ப நகர் பகுதியைச் சேர்ந்த 66 வயது நடராஜன் என்ற முதியவர், ரத்தினபுரி பகுதியில் உள்ள ரயில்வே பாலத்தின் கீழ் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த டொயோட்டா ஃபார்ட்சியூனர் கார் எதிர்பாராதவிதமாக அந்த முதியவர் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தகவல் அறிந்து வந்த போலீசார் கார் டிரைவரை மீட்டு முதியவரின் உறவினர்களை சமாதானம் செய்து அனுப்பினர். 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.