தேசிய தடுப்பூசி ஏற்றும் பணிகளுக்கு மீண்டும் படையினரின் பங்களிப்பு

பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் வழிகாட்டலுக்கமைய இலங்கை இராணுவ வைத்திய படையினர் தேசிய தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்திற்கு பங்களிக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் நடமாடும் தடுப்பூசி வழங்கல் சேவைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதற்கமைய அரசாங்க சுகாதாரத்துறை அதிகாரிகளின் ஒருங்கிணைப்பின் கீழ் இயங்கும் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 14 வது படைப்பிரிவு, யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள 53 வது படைப்பிரிவு, மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள 11 வது படைப்பிவு மற்றும் ஏனைய அனைத்து பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள படைப்பிரிவுகளில் சேவையாற்றும் இலங்கை வைத்திய படையினரால் இந்த தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்கு ஒத்துழைப்புக்கள் வழங்கப்பட்டுவருகின்றன.

இலங்கை இராணுவம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.