பெண் ஒருவர் ஏடிஎம் மிஷினிலேயே விட்டுச் சென்ற பத்தாயிரம் ரூபாய் பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்த மனிதநேயமிக்க இளைஞர்.. .. <!– பெண் ஒருவர் ஏடிஎம் மிஷினிலேயே விட்டுச் சென்ற பத்தாயிரம் ர… –>

புதுச்சேரியில் ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்ற நபர், வேறொரு பெண் ஒருவர் மிஷினிலேயே தெரியாமல் விட்டுச் சென்ற பத்தாயிரம் ரூபாய் பணத்தை எடுத்து நேர்மையாக போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்.

முருங்கப்பக்கம் கிராமத்தில் உள்ள காமராஜர் வீதியை சேர்ந்த சாந்தி என்ற அந்த பெண் அப்பகுதியில் இருந்த ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கச் சென்ற நிலையில், ரகசிய எண்ணை கொடுத்த பிறகும் பணம் வராததால், வங்கியில் தகவல் தெரிவித்துவிட்டு வீட்டுக்கு சென்றிருக்கிறார்.

சிறிது நேரம் கழித்து ஏ.டி.எம்.மில் இருந்து பணம் வெளியே வந்த நிலையில், அதே ஏ.டி.எம்.க்கு பணம் எடுக்கச் சென்ற சந்திரகுமார் என்ற இளைஞர், அந்த பத்தாயிரம் ரூபாயை எடுத்து, போலீசாரிடம் ஒப்படைத்தார். இதையடுத்து போலீசார் வங்கி அதிகாரிகளை தொடர்புகொண்டு, சாந்தியிடம் பணத்தை ஒப்படைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.