Dhanush:தனுஷின் நிறைவேறாத ஆசை, கடைசி வரைக்கும் நிறைவேறாதோ?

தன்னை, தன் தொழிலை காதலித்த
ஐஸ்வர்யா
ரஜினிகாந்தை பெற்றோர் ஆசியுடன் திருமணம் செய்து கொண்டார்
தனுஷ்
. திருமணம் நடந்து 18 ஆண்டுகள் கழித்து அவர்கள் பிரிந்துவிட்டார்கள்.

தனுஷ், ஐஸ்வர்யா பிரிய ‘ஸ்…ஸ்’ தான் காரணமா?
திரையுலகில் நடிப்பு ராட்சசன் என்று பெயர் எடுத்தவர் தனுஷ். எந்த ஒரு நடிகருக்கும் ரஜினியுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அதே போன்று எந்த ஒரு இயக்குநருக்கும் ரஜினியை வைத்து ஒரு படமாவது எடுக்க வேண்டும் என்கிற ஆவல் இருக்கும். அதற்கு தனுஷ் ஒன்றும் விதிவிலக்கு அல்ல.

ரஜினியுடன் சேர்ந்து ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் இல்லை என்றால் ஒரேயொரு காட்சியிலாவது அவருடன் சேர்ந்து வர வேண்டும் என்பதே தனுஷின் ஆசை. மேலும் ரஜினியை வைத்து படம் இயக்கும் ஆசையும் தனுஷுக்கு உண்டு.

ப. பாண்டி படம் கோலிவுட்டில் இயக்குநராக அறிமுகமானார் தனுஷ். அது அவரின் முதல் படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு சிறப்பாக இருந்தது. இந்நிலையில் தான் அவருக்கு ரஜினியை இயக்க ஆசை.

தற்போது ஐஸ்வர்யாவை பிரிந்துவிட்டதால் ரஜினியுடன் சேர்ந்து நடிக்க வேண்டும், அவரை வைத்து படம் பண்ண வேண்டும் என்கிற ஆசை கடைசி வரை நிறேவாமலேயே போய்விடுமோ என்கிற கேள்வி எழுந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.