அரசு ஊழியர்களுக்கு நிம்மதி.. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்!

மத்திய அரசு ஊழியர்களுக்கான பணி நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்துவதற்கு எந்த திட்டமும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களின் பணி நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்துவதற்கு அரசு திட்டமிட்டு வருவதாக சில தகவல்கள் வெளியாகின. இத்தகவல் அரசு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களின் பணி நேரத்தை 8 மணி நேரத்தில் 12 மணி நேரமாக உயர்த்துவதற்கு திட்டம் உள்ளதா என நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பப்பட்டது.

இதற்கு மத்திய பணியாளர் துறை இணையமைச்சர்
ஜித்தேந்திர சிங்
ராஜ்ய சபாவில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், “அதுபோன்ற எந்தவொரு முன்மொழிதலும் அரசிடம் பரிசீலனையில் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு மத்திய அரசு ஊழியர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.