இன்று தென் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் <!– இன்று தென் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் –>

குமரிக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சியின் காரணமாக இன்று தென் தமிழகக் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.

பிப்ரவரி 12 அன்று தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தேனி, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 13, 14 ஆகிய நாட்களில் தென் தமிழகக் கடலோர மாவட்டங்களில் இலேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.