உலகளவில் கொரோனா பாதிப்பு – 40 கோடியாக அதிகரிப்பு

உலகளவில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 40.37 கோடியை கடந்துள்ளது..

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. 

இதனால் இதுவரை உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 கோடியே 37 இலட்சத்து 405 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7 கோடியே 41 இலட்சத்து 73 ஆயிரத்து 642 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பிலிருந்து இதுவரை 32 கோடியே 37 இலட்சத்து 30 ஆயிரத்து 565 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும் கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் இதுவரை 57 இலட்சத்து 96 ஆயிரத்து 198 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

 
 
 

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.