திமுக எம்பி தமிழில் கேட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இந்தியில் பதிலளித்ததால் மக்களவையில் அமளி.! <!– திமுக எம்பி தமிழில் கேட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர் பிய… –>

திமுக எம்பி  தமிழில் கேட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இந்தியில் பதிலளித்ததால் மக்களவையில் அமளி ஏற்பட்டது.

இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர்.  கேள்வி நேரத்தில் திமுக உறுப்பினர் கணேசமூர்த்தி தமிழில் எழுப்பிய கேள்வியின் முதல் பகுதியை தாம் கவனிக்கவில்லை என்றும் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

இதையடுத்து சபாநாயகர் ஒம் பிர்லா மீண்டும் கேள்வியைக் கேட்கும்படி ஆங்கிலத்தில் கூற தாம் தமிழில்தான் கேட்க முடியும் என்று மீண்டும் தமிழில் கேள்வி எழுப்பினார் கணேசமூர்த்தி.

இதன் ஆங்கில மொழிபெயர்ப்பை கேட்ட பியூஷ் கோயல் தம்மால் இந்தியில்தான் பதிலளிக்க முடியும் என்று விளக்கினார். தேவையானால் உறுப்பினர்களுக்கு தமது பதில் தமிழில் மொழிபெயர்த்து தரப்படும் என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.