நள்ளிரவில் சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகள் வீச்சு! – ஒருவர் கைது

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அந்த பகுதியில் பாதுகாப்பு பணிக்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 3 மணி அளவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக சொல்லப்படுகிறது. அந்நேரத்தில் பாஜக தலைமை அலுவலகத்தின் கதவு சாத்தப்பட்டு இருந்ததால் யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. 3 மது பாட்டில்களில் பெட்ரோல் மூலம் குண்டு வீசப்பட்டு உள்ளது.

கமலாலயம்

இதனிடையே பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட விவகாரத்தில் சிசிடிவி உதவியுடன் சென்னை நந்தனத்தை சேர்ந்த வினோத் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.