மத்திய படையினர் 1,439 பேர் மீது கிரிமினல் வழக்கு: மாநிலங்களவையில் தகவல்

புதுடெல்லி, 
நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய மந்திரி நித்யானந்த்ராய் எழுத்து மூலம் பதில் அளித்தார். அதில் இடம் பெற்றிருந்த முக்கிய தகவல்கள்:-
* 7 மத்திய போலீஸ் படைகளில் 1,439 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

* 181 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன.
* அதிகபட்சமாக எல்லை பாதுகாப்பு படையினர் மீது 481 மீதும், மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் 273 பேர் மீதும் கிரிமினல்-ஊழல் வழக்குகளும் போடப்பட்டுள்ளன.
* வழக்குகள் போடப்பட்டுள்ளவர்களில் 71 பேர், இந்திய திபெத் எல்லை போலீசார் ஆவார்கள். அசாம் ரைபிள் படையினர் 60 பேர் மீதும், தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள் 7 பேர் மீதும் இத்தகைய வழக்குகள் உள்ளன.
இந்த தகவல்கள் மத்திய மந்திரி நித்யானந்த் ராய் அளித்த பதிலில் இடம்பெற்றுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.