182 ஏக்கர் அரசு நில மோசடியில் கைது அதிமுக நிர்வாகி உட்பட 3 பேரை காவலில் விசாரிக்க சிபிசிஐடி மனு

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவில் 182 ஏக்கர் அரசு நிலத்தை தனியாருக்கு முறைகேடாக பட்டா மாறுதல் செய்த வழக்கில் அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் அன்னப்பிரகாஷ், சர்வேயர் பிச்சைமணி, அவரது உதவியாளர் அழகர் ஆகிய 3 பேர் கைதாகி சிறையில் உள்ளனர். இவர்களை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு, தேனி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் நேற்று மனு செய்தனர். விசாரணைக்கு பின் மேலும் பலர் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இதனிடையே நில மோசடி வழக்கில் சம்பந்தப்பட்ட கோட்டாட்சியர் ஆனந்தி, நேற்று தேனியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.