அஜித்தை பற்றி அப்படி பேசுனது என்னோட தப்புதான்: குமுறும் இயக்குனர் சுசீந்திரன்..!

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாவது முறையாக எச் வினோத் இயக்கத்தில் ‘
வலிமை
‘ படத்தில் நடித்துள்ளார் அஜித். இந்தப்படத்தின் வெளியீட்டிற்காக வெறித்தனமாக காத்து கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள். வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது ‘வலிமை’ படம்.

நீண்ட காலமாக தயாரிப்பில் இருக்கும் ‘வலிமை’ படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அண்மையில் ‘வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர், பர்ஸ்ட் லுக், டிரெய்லர் உள்ளிட்டவை ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இயக்குனர்
சுசீந்திரன்
நடிகர் அஜித்திடம் மன்னிப்பு கோரியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. சுசீந்திரன் இயக்கத்தில்
ஜெய்
நடிப்பில் உருவாகியுள்ள படம் ’
வீரபாண்டியபுரம்
‘. இந்தப்படத்தின் ஆடியோ விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சுசீந்திரன், ஜெய், தயாரிப்பாளர் ஐஸ்வர்யா உள்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

Rajini: நெல்சனை ஓகே பண்ணிய கையோடு கார்த்திக் சுப்புராஜுக்கு போன் போட்ட ரஜினி..!

இந்த விழாவில் பேசிய சுசீந்திரன், ‘முன்பு அஜித் அரசியலுக்கு வர வேண்டும் என்று நான் சொன்னேன். அந்த மாதிரி என் மனதில் தோன்றியது சொன்னது தவறு என்பதை இன்று உணர்ந்து கொண்டேன். அவர் தற்போது நல்ல திருப்தியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். எனவே அவருக்கு அரசியல் தேவையில்லை என்று இப்போது கூறுகிறேன்’ என்று கூறியுள்ளார்.

அவரிடம் அஜித்தை அரசியலுக்கு வர சொன்னது தவறு என பேசியுள்ள வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சுசீந்திரனின் ’வீரபாண்டியபுரம்’ படம் பிப்ரவரி 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப்படத்தில் ஹீரோவாக ஜெய் நடித்துள்ளதோடு இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மியூசிக் எனக்குள் வந்ததுக்கு இவரு தான் காரணம்: மனம் திறந்த ஜெய்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.