இலங்கையிலிருந்து உள்ளாடைக்குள் தங்கம் கடத்தி வந்த நபர் கைது



இலங்கையிலிருந்து உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து கடத்தி வந்த அபுதாஹிர் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இலங்கையிலிருந்து இன்று அதிகாலை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை விமான நிலையத்துக்கு வந்தது.

இதில் வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனையிட்ட போது அபுதாஹிர்(வயது 38) என்பவர் மீது சந்தேகம் எழுந்தது.

அவரும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால், அவரிடம் தீவிர சோதனை நடத்தியதில் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து தங்கப்பசையை கடத்தி வந்தது தெரியவந்தது.

மதுரையை சேர்ந்த அவர் 1.23 கிலோ தங்கப்பசையை கடத்தி வந்துள்ளார், இதனையடுத்து இவரை கைது செய்த சுங்க அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.