ஒரு வருஷத்துக்கு பால், போன் ரீசார்ஜ் இலவசம்: பழநியை திணறடிக்கும் சுயேச்சைகள்

பழநி: அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு இணையாக சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பல இடங்களில் சுயேச்சை வேட்பாளர்கள் அளிக்கும் வாக்குறுதிகள் மிரள வைப்பதாக உள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநி நகராட்சி மற்றும் பேரூராட்சி  வார்டுகளில் சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கும் இடங்களில் தங்களை ஜெயிக்க வைத்தால் ஒரு வருடத்திற்கு வீட்டுக்கு பால் இலவசமாக விநியோகம். செல்போன் ரீசார்ஜ் செய்து தருவேன் என்று வாக்குறுதிகளை வாரி வீசி வாக்கு வேட்டையாடி வருகின்றனர். இதுபோன்ற கவர்ச்சிகரமான அதிரடி அறிவிப்புகளால் பழநி தேர்தல்களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.