சீரியலுக்கு நோ சொன்ன தேவதர்ஷினி!

தமிழ் சின்னத்திரையுலகில் ஒரு காலத்தில் முக்கிய நடிகையாக வலம் வந்தவர் நடிகை தேவதர்ஷினி. 'விடாது கருப்பு', 'அண்ணாமலை', 'சிதம்பர ரகசியம்', 'கோலங்கள்', 'ரமணி விசஸ் ரமணி' ஆகிய தொடர்களில் இவரது நடிப்பை பலரும் பாராட்டியுள்ளனர். இயக்குனர் நாகாவின் சூப்பர் ஹிட் காமெடி தொடரான ரமணி விசஸ் ரமணி தற்போது மூன்றாவது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது.

முந்தைய இரு சீசன்களில் மிசஸ் ரமணியாக கலக்கி வந்த தேவர்தர்ஷினி மூன்றாவது சீசனில் நடிக்கவில்லை. காரணம் தி பேமிலி மேன் 2 சீரியஸில் தேவதர்ஷினியின் கதாபாத்திரம் அதிக கவனத்தை பெற்றது. அதன்பிறகு இவருக்கு பட வாய்ப்புகளும் குவிந்துள்ளதால், இனி சீரியல் வேண்டாம் என ஒதுக்கிவிட்டதாக கோலிவுட் வட்டாரத்திலிருந்து தகவல் கசிந்து வருகின்றன.

2003ம் ஆண்டு பார்த்திபன் கனவு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான தேவதர்ஷினி தென்னிந்திய மொழிகளில் கிட்டத்தட்ட 90க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். விஜய் சேதுபதியில் 96 படத்தில் நடித்ததற்கு பிறகு வெள்ளித்திரையில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது சீரியலை விட சினிமா பட வாய்ப்புகள் அதிகம் வருவதால் அதில் கவனம் செலுத்துகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.