செமஸ்டர் தேர்வுகளை ஒத்திவைக்க மனு | Dinamalar

பெங்களூரு-பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளை ஒத்திவைக்க, கல்லுாரி மற்றும் தொழில்நுட்ப கல்வித்துறை கமிஷனர் கோரிக்கை வைத்துள்ளார்.பல்கலைக்கழக பட்டப்படிப்பு செமஸ்டர் தேர்வுகளை ஒரு மாதம் ஒத்திவைக்க வேண்டுமென உயர்கல்வித்துறை கூடுதல் தலைமை செயலரிடம், கல்லுாரி மற்றும் தொழில்நுட்ப கல்வித் துறை கமிஷனர் பிரதீப் கோரிக்கை மனு அளித்துள்ளார்.கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:கொரோனா மூன்றாம் அலை மற்றும் கவுரவ விரிவுரையாளர்களின் போராட்டம் காரணமாக பாடத்திட்டங்களை நிறைவு செய்ய முடியவில்லை.ஆனால் சில பல்கலைக்கழகங்கள் தேர்வுகளுக்கான கால அட்டவணையை நிர்ணயித்துள்ளன. பாட திட்டங்களை முழுமையாக முடிக்க வேண்டியிருப்பதால், தேர்வுகளை ஒரு மாதம் தள்ளி வைப்பது, மாணவர்களை சிறந்த முறையில் தயார்படுத்துவதற்கான காலமாக இருக்கும்.இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.