தாயாருடன் துணி துவைக்க சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து 2 சிறுமிகள் உயிரிழப்பு <!– தாயாருடன் துணி துவைக்க சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து … –>

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே தாயாருடன் துணி துவைக்க சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து 2 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காவேரிப்பாக்கம் அடுத்த கன்னிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ரேகா தனது 8 மற்றும் 12 வயது குழந்தைகளை அழைத்துக்கொண்டு தன் அண்ணன் வீட்டருகே உள்ள கிணற்றில் துணி துவைக்கச் சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது, கிணறு அருகே விளையாடிக்கொண்டிருந்த இரு குழந்தைகளும் அடுத்தடுத்து தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது. குழந்தைகளை காப்பாற்ற ரேகாவும் கிணற்றில் குதித்ததாக கூறப்படும் நிலையில், சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் மூவரையும் மீட்க முயற்சி செய்தனர்.

ஆனால் ரேகாவை மட்டும் உயிருடன் மீட்டனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி 2 குழந்தைகளையும் சடலமாக மீட்டனர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.