பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த யாசகர்



ஹக்மன பகுதியில் உயிரிழந்த யாசகர் ஒருவர் பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த யாசகர் திடீரென உயிரிழந்துள்ள நிலையில் அவரிடம் இருந்து இலட்சக்கணக்கான பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

யாசகரின் காற்சட்டைகளிலிருந்து சுமார் 4 லட்சம் ரூபா பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹக்மன – கொங்கல பகுதியில் வாழ்ந்த வந்த 69 வயதான E.S.விமலதாஸ என்ற யாசகரிடமிருந்தே, இவ்வாறு பெருந்தொகை பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

உயிரிழந்த  யாசகர் தங்கியிருந்த வீட்டிற்கு அருகிலேயே, அவர் உயிரிழந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.