மனநலம் பாதித்த மூதாட்டியை தர தரவென இழுத்துச் சென்று தாக்கிய மாணவர் கைது <!– மனநலம் பாதித்த மூதாட்டியை தர தரவென இழுத்துச் சென்று தாக்க… –>

திருப்பதியில் மனநலம் பாதித்த மூதாட்டியை சாலையில் தர தரவென இழுத்துச் சென்று கல்லூரி மாணவர் தாக்கும் வீடியோ வெளியான நிலையில் இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

ரங்கா ரெட்டி மாவட்டம் ஷாத் நகரில் சாலையில் காயங்களுடன் இருந்த மூதாட்டியிடம் பொது மக்கள் விசாரித்த போது இளைஞர் தாக்கியது தெரியவந்துள்ளது.

அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்த மக்கள், இளைஞரை தாக்கும் வீடியோவை கொண்டு போலீசில் புகாரளித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக அதேபகுதியை சேர்த கல்லூரி மாணவர் பர்வேசை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் மூதாட்டி தகாத வார்த்தையில் திட்டியதால் தாக்கியதாக மாணவர் தெரிவித்ததாக போலீசார் கூறினர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.